கடலூர்: 6 சிறுமிகள் உட்பட 7 பேர் தடுப்பணையில் மூழ்கி பலி; சோகத்தில் மூழ்கிய கிராமங்கள்

0

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்து இருக்கும் கீழ் அருங்குணம் - குச்சிப்பாளையம் பகுதியை கடந்து செல்கிறது கெடிலம் ஆறு. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது பரவலாக கோடைமழை பெய்து வருவதால் இந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்கியிருக்கிறது.

உயிரிழந்த 7 பேர்

அந்த தடுப்பணையை சுற்றியிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் அந்த தண்ணீரில் குளிப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, சிறுமிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷினி, நவி ஆகியோர் அந்த தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றனர். தடுப்பணையில் இறங்கி, அவர்கள் தண்ணீரில் சிறிது தூரம் சென்றபோது ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று உயிர்பயத்தில் அவர்கள் கூச்சலிட்டதை கேட்டு, அங்கு ஓடி வந்த கிராம மக்கள் தடுப்பணையில் மூழ்கிய 7 பேரையும் மயங்கிய நிலையில் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 7 பேரும் ஏற்கனவே மூச்சுத்திணறி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சர் அறிவிப்பு

இந்நிலையில், உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 7 குடும்பத்துக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.


மேலும் படிக்க கடலூர்: 6 சிறுமிகள் உட்பட 7 பேர் தடுப்பணையில் மூழ்கி பலி; சோகத்தில் மூழ்கிய கிராமங்கள்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top