`ஓய்வு எடுக்க காரை நிறுத்தினர்' - நகை, செல்போன் கொள்ளை; தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் கைவரிசை

0

சென்னை சோழபுரம் ஸ்ரீதர் அவன்யூவை சேர்ந்தவர் பிரதீப்குமார். இவர் சென்னையிலிருந்து தனது குடும்பத்தினர், நண்பர் குடும்பத்தினருடன் மதுரையில் நடந்த காதணி விழாவுக்காக காரில் சென்றுவிட்டு, மீண்டும் சென்னைக்கு இரவு நேரத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பிரதீப் குமார் இரவு இரண்டு மணியளவில் கண் அசந்திருக்கிறார்.

பெரம்பலூர்

இதனால், கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்துவிட்டு செல்வதற்காக அவர்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், வல்லாபுரம் பெட்ரோல் பங்க் அருகில் காரை நிறுத்திவிட்டு, காற்றுக்காக காரின் கண்ணாடியைக் கொஞ்சமாக இறங்கிவிட்டு காருக்குள் தூங்கியிருக்கிறார்கள்.

அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் காரில் தூங்கிய பெண்களிடம் இருந்து 5 பவுன் நகை, காரின் டேஷ்போர்டில் வைத்திருந்த இரண்டு செல்போன் இருந்த கைப்பை ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக பிரதீப்குமார் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் விசாரணை நடத்தி மர்மநபரை வலைவீசித் தேடி வருகின்றனர்.

நகை கொள்ளை

இதுகுறித்து சமூக ஆர்வலர் கார்த்தியிடம் பேசினோம். "பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், காரை நிறுத்திவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தவர்களிடம் கைவரிசை காட்டியிருக்கிறார்கள் என்றால் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இம்மாவட்டத்தில் கொள்ளையர்களுக்கு போலீஸார் மீது கொஞ்சம் கூட பயம் இல்லாமல் போய்விட்டது. இதற்கு யார் காரணம். இம்மாவட்டத்தில் முகமுடி மற்றும் டவுசர் கொள்ளையர்களின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை.

கடந்த இரண்டு வாரத்தில் இரண்டு மூன்று கொள்ளைச் சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால், நிம்மதி இழந்து நிற்கிறார்கள். ஊருக்கு வெளியேவும், நகரின் மையப்பகுதியிலும் உள்ள வீடுகளில் `சொந்தக்காரங்க வந்திருக்கிறோம், பக்கத்துல ஒரு விபத்து நடந்துவிட்டது’ என்று சொல்லி கதவைத் தட்டித் திறக்கவைத்து, வீட்டிலுள்ள பெண்களைத் தாக்கி நகைகளைப் பறித்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

பெரம்பலூர் எஸ்.பி ஆபிஸ்

இந்த கொள்ளை சம்பவமும் அவர்களின் கைவரிசையாக தான் இருக்கமுடியும். எனவே மக்கள் அமைதியாக நிம்மதியாகவும் வாழவேண்டும் என்றால் போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது இது சாத்தியம்" என்கிறார்.


மேலும் படிக்க `ஓய்வு எடுக்க காரை நிறுத்தினர்' - நகை, செல்போன் கொள்ளை; தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் கைவரிசை
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top