கல்குவாரி பள்ளத்தில் மூழ்கி பாட்டி, பேரக்குழந்தைகள் உயிரிழப்பு - திண்டிவனம் அருகே சோகம்

0

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பா(60). இவரின் மகள் விஜயஸ்ரீயை, அருகில் உள்ள தென்கலவாய் பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த தம்பதிக்கு 16, 14 வயதில் இரு மகள்களும், 8 வயதில் ஒரு மகனும் இருந்துள்ளனர். இவர்களின் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக, தன் தாய்வீடான பெருமுக்கலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார் விஜயஸ்ரீ. இந்த தம்பதியினர் வெளியில் சென்றுவிட்ட நிலையில், குழந்தைகள் மூன்று பேரும்... பாட்டி, புஷ்பாவுடன் இருந்துள்ளனர்.

உயிரிழந்த நான்கு பேர்.

துணிகளை துவைத்துக்கொண்டு வருவதற்காக அருகில் உள்ள கல்குவாரி பள்ளத்திற்கு பாட்டியுன் குழந்தைகள் 3 பேரும் சென்றதாக கூறப்படுகிறது. 4 பேரும் அந்த கல்குவாரி பள்ளத்தில் இறங்கிய போது, எதிர்பாராத விதமாக 4 பேரும் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பள்ளத்தில் மூழ்கியவர்களின் கூக்குரலை கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, பிரம்மதேசம் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டிவனம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், நீரில் மூழ்கிய 4 பேரின் உடல்களையும் மீட்டுள்ளனர்.

பின், பிரேத பரிசோதனை செய்வதற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து 174-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த பிரம்மதேசம் போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாட்டியுடன் சேர்ந்த 3 பேரக்குழந்தைகளும் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்திருக்கும் சம்பவம் திண்டிவனம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க கல்குவாரி பள்ளத்தில் மூழ்கி பாட்டி, பேரக்குழந்தைகள் உயிரிழப்பு - திண்டிவனம் அருகே சோகம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top