`ஆர்டர்லி' காவலர்கள் - நீதிமன்ற உத்தரவுக்குப்பிறகு விடிவு காலம் பிறக்குமா?

0

காவல்துறையில் ஆர்டர்லி என்ற நடைமுறை ஆங்கிலேயேர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அந்தக்காலத்தில், போன் அழைப்புகளுக்கு பதிலளிப்பது, சீருடைகளை பராமரிப்பது, உயரதிகாரிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஆர்டர்லிகள் ஈடுபடுத்தப்பட்டனர். பிற்காலத்தில் ஆர்டர்லிகளாக பணியாற்றிய காவலர்கள், அதிகாரிகளின் வீடுகளில் எடுபிடி வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இது காலம், காலமாக காவல்துறையில் நடந்துவரும் செயலாகும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், ஆர்டர்லி காவலர்கள், உயரதிகாரிகளால் பழிவாங்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்குப் பயந்து வேறுவழியின்றி ஆர்டர்லி பணிகளை காவலர்கள் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

போலீஸ்

ஆர்டர்லி விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் ஏற்கெனவே வந்துள்ளன. ஆர்டர்லி நடைமுறை ரத்து செய்யப்பட வேண்டும் என நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கிய பிறகும் ஏனோ, காவல்துறையில் ஆர்டர்லி முறை தொடர்வது வேதனைக்குரியது. தமிழக காவல்துறையில் முன்னாள், இன்னாள் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் ஆர்டர்லியாக உள்ளனர். இதில் சிலர் விருப்பப்பட்டு இந்தப் பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் பலர், நிர்ப்பந்தத்தின் காரணமாக ஆர்டர்லிகளாக உள்ளனர். காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்யும் ஆர்டர்லிகளுக்கு அரசு சம்பளம். ஆகமொத்தத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்காத வேலைக்காரர்களாக ஆர்டர்லி காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தச் சூழலில்தான் தமிழக காவல் துறையை சேர்ந்த மாணிக்கவேல் என்பவர், தன்னை காவலர் குடியிருப்பில் இருந்து வெளியேற்ற பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸை எதிர்த்து கடந்த 2014-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த போதுதான் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஆர்டர்லி காவலர்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். காவலர் மாணிக்கவேல் தொடர்ந்த, வழக்கு கடந்த 14-ம் தேதி விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் குமரேசன் ஆஜராகி, ''ஆர்டர்லி முறை தொடர்பாக, டி.ஜி.பி.,க்கு, உள்துறைச் செயலர் கடிதம் அனுப்பி உள்ளார். உயர் அதிகாரிகளுடன், முதல்வரும் ஆலோசனை நடத்தி உள்ளார். அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று வாதிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம்

அப்போது, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், போலீஸ் பணி என்ற கனவில் பயிற்சி முடித்து, மாதம் 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுபவர்களை, அதிகாரிகளின் வீட்டு வேலைகளை செய்வதற்காக, ஆர்டர்லிகளாக பயன்படுத்துவது, சட்டப்படி குற்றம். ஆர்டர்லி வைத்திருக்கும் அதிகாரிகள் யாராக இருந்தாலும், வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை திரும்பப் பெற வேண்டும்.
அரசியல்வாதிகளும், போலீஸாரும் கூட்டு சேர்ந்து இயங்கினால், அது அழிவுக்கு வழிவகுக்கும். போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களில் மட்டும் கருப்பு ஸ்டிக்கரை அகற்றாமல் இருப்பதை, என்னவென்று கூறுவது? என்று கூறியதோடு, வழக்கு விசாரணையை ஜூலை 25க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

நீதிமன்றத்தின் இந்த அதிரடிக்குப்பிறகு தமிழக காவல் துறையில் எந்தெந்த அதிகாரிகள் வீடுகளில் ஆர்டர்லிகளாக யார், யார் பணியாற்றுகிறார்கள் என்ற பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சில ஐபிஎஸ் அதிகாரிகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் ஆர்டர்லிகளாக காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அடுத்த வழக்கு விசாரணைக்கு முன், ஆர்டர்லிகளாக பணியாற்றும் காவலர்களை பணிக்கு திரும்பவும் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

போலீஸ்

இதுகுறித்து மனஉளைச்சலுக்குள்ளான ஆர்டர்லி காவலர்கள் சிலரிடம் பேசினோம், ``தமிழக காவல்துறையில் ஆர்டர்லிகளின் எண்ணிக்கை முன்பை விட குறைந்து விட்டது. முதல்நிலைக்காவலர்கள் முதல் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை ஆர்டர்லி பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு வேலை நேரம் என கிடையாது. யூனிபார்ம் அணியவேண்டியதில்லை. காவல் நிலையங்களிலிருந்து (உயரதிகாரிகளின் உத்தரவுப்படி) வரும் உத்தரவின்படி அதிகாரிகளின் வீடுகளில் சொல்லப்படும் வேலைகளை செய்து கொடுத்தால் போதும். அதிகாரிகளுக்கு விசுவாசமாக இருக்கும்போது சில காரியங்களையும் சில ஆர்டர்லி காவலர்கள் செய்து கொள்கின்றனர். அத்தகையவர்கள்தான் ஆர்டர்லி காவலர்களாக பணியாற்ற விரும்புவார்கள். அதே நேரத்தில் காவல்துறைக்கு புதிதாக வேலைக்கு வருபவர்கள் (பட்டதாரிகள்) ஆர்டர்லியாக பணியாற்ற விரும்புவதில்லை. இன்னும் சில அதிகாரிகளில் வீடுகளில் மனித உரிமை மீறல் செயல்கள் நடக்கும்போதுதான் ஆர்டர்லி காவலர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். காவல்துறை பணி என்பது அதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். அதனால், அதிகாரிகள் என்ன வேலை செய்ய சொல்கிறார்களோ அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் பணியாற்ற வேண்டும். இல்லையென்றால் காவல் பணியில் கஷ்டங்களை சந்திக்க நேரிடும். தற்போது ஆர்டர்லி காவலர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் தலையீட்டுள்ளதால் விடிவு காலம் பிறக்கும் என நம்புகிறோம்" என்றார்.


மேலும் படிக்க `ஆர்டர்லி' காவலர்கள் - நீதிமன்ற உத்தரவுக்குப்பிறகு விடிவு காலம் பிறக்குமா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top