``என்ன குற்றத்துக்கான வழக்கு என்பதைக் குறிப்பிடாமல் நான் பார்த்த முதல் எஃப்.ஐ.ஆர்"- அசாதுதீன் ஒவைசி

0

முகமது நபிகள் குறித்து பா.ஜ.க நிர்வாகிகள் நுபுர் ஷர்மாவும், நவீன் ஜிண்டாலும் தெரிவித்த சர்ச்சைக் கருத்துகளை விமர்சித்ததற்காக தன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார் அசாதுதீன் ஒவைசி. இந்த விவகாரம் தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"என் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ரை பெற்றுக்கொண்டேன். என்ன குற்றத்துக்கான வழக்கு என்பதைக் குறிப்பிடாமல் நான் பார்த்த முதல் எஃப்.ஐ.ஆர் இது தான்.

நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் போன்றோருக்கு எதிராக வழக்குகளைத் தொடர டெல்லி காவல்துறைக்குத் தைரியம் இல்லை என்று தோன்றுகிறது. வெளிப்படையாக ஒரு தரப்பினர் முகமது நபியை அவமதித்துள்ளனர், மற்றொரு பக்கம் பா.ஜ.க ஆதரவாளர்களைச் சமாதானப்படுத்துவதற்காக எதிர்த்தரப்பிலும் வெறுப்புப் பேச்சு இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

அசாதுதீன் ஓவைசி

முகமது நபி குறித்த சர்ச்சை பேச்சுக்குச் சர்வதேச கண்டனங்களுக்குப் பிறகு சமாதான நடவடிக்கையாக பா.ஜ.க தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு கோபப்படும் பா.ஜ.க ஆதரவாளர்களைச் சமாதானப்படுத்த முஸ்லிம் மாணவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மீது வெறும் முஸ்லீம் என்பதற்காக வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்துத்துவா அமைப்புகள் வெறுக்கத்தக்கப் பேச்சுகள் மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கலாசாரத்தைக் கொண்டுள்ளனர். அதற்கு வெகுமதியாகப் பதவி கிடைக்கும் எனப் போதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு உதாரணம் யோகி-யின் வெறுப்பு பேச்சுக்கு லோக்சபா இடங்கள் மற்றும் முதல்வர் பதவி வழங்கப்பட்டது. பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சுகளுக்கும் இதேபோல் வெகுமதி அளிக்கப்பட்டது. சமீபத்தில் என்மீது துப்பாக்கிச் சூடு நடத்தி என்னைக் கொலை செய்ய முயன்றவர்கள் கூட தாங்கள் முக்கிய இந்துத்துவா அரசியல்வாதிகளாக மாற வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

இந்த கலாசாரம் முடிவுக்கு வர வேண்டும். பிரதமர் மோடி நேர்மையாக இருந்திருந்தால் வெறுப்புப் பேச்சுகளை ஒழித்திருப்பார். எனக்கு எதிரான எப்.ஐ.ஆர் தொடர்பாக எங்கள் வழக்கறிஞர்களைக் கலந்தாலோசித்து வருகிறோம். இந்த தந்திரங்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். வெறுப்பு பேச்சுகளைப் பேசுபவர்களை விமர்சிப்பதும், வெறுப்பூட்டும் பேச்சுக்களைப் பேசுவதும் சமமாக முடியாது" எனப் பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க ``என்ன குற்றத்துக்கான வழக்கு என்பதைக் குறிப்பிடாமல் நான் பார்த்த முதல் எஃப்.ஐ.ஆர்"- அசாதுதீன் ஒவைசி
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top