விழுப்புரம்: குடும்ப தகராறு; இளம்பெண் உயிரிழப்பு; நீதி விசாரணை கோரும் உறவினர்கள்! - நடந்தது என்ன?

0

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள வைரபுரத்தை சேர்ந்த அசோக் என்பவருக்கும், பெரமண்டூர் கிராமத்தை சேர்ந்த ஷர்மிளா என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி 2 வருடங்களுக்கு மேல் ஆகியும், இந்த தம்பதிக்கு குழந்தை இல்லையாம். இதனிடையே கணவன் - மனைவிக்குள் அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 22-ம் தேதி குடும்ப பிரச்னையின் காரணமாக ஷர்மிளா அவரது தாய் வீடு உள்ள பெரமண்டூருக்கு சென்றுள்ளார். 26-ம் தேதி மாலை ஷர்மிளா வீட்டிற்கு சென்ற அவரின் கணவர் அசோக், ஷர்மிளாவிடம் சமரசம் பேசி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

உயிரிழந்த ஷர்மிளா

அப்போது கணவன் - மனைவி இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது, அசோக் வெளியில் சென்ற சமயத்தில்... அன்று இரவே ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாகவும், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்படுவதாகவும் ஷர்மிளாவின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஷர்மிளாவின் குடும்பத்தினர் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்துள்ளனர். வருவாய் துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக திருமணமான இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், "திருமணமாகி குழந்தை இல்லாததாலும், வரதட்சணை கேட்டும் அசோக், அவரின் குடும்பத்தார் எனது பெண்ணை (ஷர்மிளா) அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். குடும்ப பிரச்னையால் அண்மையில் என் வீட்டிற்கு வந்திருந்த எனது பெண்ணை, சமரசம் பேசி அழைத்து செல்ல வந்த அசோக், பெரமண்டூர் கிராமத்திலிருந்தே அடித்து துன்புறுத்தி அழைத்து சென்றுள்ளார். என்னுடைய மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை. அசோக், அவரின் குடும்பத்தினர் தான் அடித்து கொலை செய்திருக்க வேண்டும். எனவே, உரிய நீதி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று 27-ம் தேதியே ஷர்மிளாவின் தந்தை வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

புகாரை பெற்ற காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை உடற்கூறாய்வு செய்வதற்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் இருந்து முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடற்கூறாய்வுக்கு பின்னர், உடலை பெற்ற குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உரிய முறையில் அடக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில், "உயிரிழந்த பெண் தாக்கப்பட்டிருக்கிறார். ஆகவே, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். அசோக் என்பவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... உயிரிழந்த ஷர்மிளாவின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து விழுப்புரம் எஸ்.பி அலுவலகம் எதிரே நேற்று முந்தினம் (02.06.2022) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு, புகார் மனு அளித்துள்ளனர். இதனால் விழுப்புரம் பகுதியில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலையே விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் காவல்துறை அதிகாரிகள்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

இந்த வழக்கின் நிலை குறித்து வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு பேசினோம். "174/3 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஏ.எஸ்.பி சார் விசாரித்து வருகிறார். தனிப்படையும் அமைக்கப்பட்டு அசோக் என்பவரை தேடி வருகிறோம். இன்னும் ஓரிரு தினங்களில் பிடித்துவிடுவோம். உடற்கூறாய்வு முடிவு வரவேண்டியுள்ளது. அந்த முடிவின் அடிப்படையில், வழக்கின் பிரிவு மாற்றப்படலாம்" என்றார்.


மேலும் படிக்க விழுப்புரம்: குடும்ப தகராறு; இளம்பெண் உயிரிழப்பு; நீதி விசாரணை கோரும் உறவினர்கள்! - நடந்தது என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top