ஒற்றைத் தலைமை: அதிமுக பொதுக்குழுவின் முடிவு என்னவாக இருக்கும்? - ஒரு டீசர் பார்வை

0

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வுக்குள், கடந்த ஒரு வாரகாலமாக பல அதிரடிக் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன், 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 'பொதுக்குழுவைத் தள்ளிவைக்க வேண்டும்' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இணைந்து இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியிருக்கின்றனர். அதேவேளையில், 'திட்டமிட்டபடி பொதுக்குழு நடந்தே தீரும்' என பெரும்பான்மை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கருத்துத் தெரிவிக்க அதிமுக வட்டாரத்தில் அனல் கூடியிருக்கிறது.

அதிமுக

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவேண்டிய முடிவுகள் குறித்து விவாதிக்க, கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. அப்போது கட்சியில் ஒற்றைத் தலைமை கோரிக்கை பெருவாரியான மா.செ-க்களால் முன்வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. கூட்டம் முடிந்து, வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், `அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை எனக் கூறியிருக்கிறார்கள்' என்று கருத்துத் தெரிவித்திருந்தார். அன்று தொற்றிக்கொண்ட பரபரப்பு தற்போதுவரை தொடர்கிறது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிலும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலும் அதிமுக நிர்வாகிகள் குவிந்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பொள்ளாச்சி ஜெயராமன், எம்.ஆர், விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், நத்தம் விசுவநாதன், வளர்மதி, கோகுல இந்திரா, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், பெஞ்சமின், தளவாய் சுந்தரம், ஆர்.காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர், வெல்லமண்டி நடராஜன், மைத்ரேயன் உள்ளிட்ட நிர்வாகிகளும் தொடர்ச்சியாக அலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஓ.பி.எஸ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்

தொடர்ந்து எடப்பாடி தரப்பில் இருந்து தம்பிதுரை, செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் மோகன் உள்ளிட்டோர் ஓ.பி.எஸ்ஸிடம் சமசரசப் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருக்கின்றனர். ஆனால், `ஒற்றைத் தலைமை என்கிற பேச்சுக்கே தற்போது இடமில்லை, இரட்டைத் தலைமையே நீடிக்கவேண்டும். இதுகுறித்து 19-ம் தேதி மாலை ஆறு மணிக்குள், எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது ஆதரவாளர்களுக்குத் தெரிவிக்கவேண்டும்' என ஓ.பி.எஸ் கெடு விதித்திருந்தாகத் தகவல் வெளியானது. ஆனால், எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று, பத்திரிகையாளர்களைச் சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியிருப்பதாக ஒரு கடிதத்தை வாசித்தார். அதில், `முன்னறிவிப்பு இல்லாமல் ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை குறித்து 14.6.2002 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சில மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள் கழக சட்ட விதிகளை உணராமலும் அறியாமலும் கருத்து தெரிவித்துள்ளனர். அத்தகைய கருத்தால் கழகத் தொண்டர்கள் கொதித்துப்போயுள்ளனர். கழக நிர்வாகிகள் மத்தியிலும், கழகத் தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அத்தகைய கருத்தால் கட்சியில் குழப்பமும், கட்சியின் நற்பெயருக்குக் களங்கமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஒற்றைத் தலைமை விவகாரம்

இதன் காரணமாக ஜூன் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழு, செயற்குழுவைத் தள்ளிவைக்க வேண்டும். அடுத்த கூட்டத்துக்கான இடம், நாள் மற்றும் நேரத்தை கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய நாம் இருவரும் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யலாம்' என வாசித்துக் காண்பித்தார். அவரைத் தொடர்ந்து, கே.பி.முனுசாமி தலைமையில் ஒரு குழு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதம் பற்றிக் கேள்வியெழுப்ப, 'அப்படி எந்தக் கடிதமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஓ.பி.எஸ்ஸும் கண்டிப்பாக பொதுக்குழுவுக்கு வருவார்' எனப் பதிலளித்தார். அதேபோல, அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக வழக்குகளும் தொடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கின்றன.

அ.தி.மு.க பொதுக்குழு

இந்தநிலையில், அதிமுகவின் பொதுக்குழு நடக்குமா, நடந்தால் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்து அதிமுக வட்டாரத்தில் பேசினோம்,

``நிச்சயமாக பொதுக்குழுக் கூட்டம் நடக்கும். பெருவாரியான நிர்வாகிகள் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டனர். ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி ஏகோபித்த ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்படுவார். பொதுக்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து, தீர்மானக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு தன்னுடைய கருத்துக்களைச் சொல்லிவிட்டு இப்போது பொதுக்குழுவைத் தள்ளிவையுங்கள் என ஓ.பி.எஸ் கடிதம் எழுதுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்பதும் அவர் ஒப்புதலுடன் எடுத்த முடிவுதான். இப்போது வந்து அவர்களையும் அழைக்க வேண்டும் என்று சொல்வதையும் ஏற்கமுடியாது. பொதுக்குழுவுக்கு எதிராக இரண்டு வழக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதில், திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் கட்சி உறுப்பினரே இல்லை. மற்றொரு வழக்கு பாலகிருஷ்ணன் என்பவரால் தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிற்காது'' என்கிறார்கள் நம்பிக்கையாக.


மேலும் படிக்க ஒற்றைத் தலைமை: அதிமுக பொதுக்குழுவின் முடிவு என்னவாக இருக்கும்? - ஒரு டீசர் பார்வை
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top