``பிரதமர் மோடி தலையிட்டு, விஷம் பரவுவதை உடனே தடுக்க வேண்டும்” - நடிகர் நசீருதின் ஷா

0

பா.ஜ.கவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கடந்த சில தினங்களாகவே உலக அளவில் பல்வேறு கண்டனங்களை இந்தியா சந்தித்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஏதாவது செய்யுமாறு நடிகர் நசீருதின் ஷா பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

நுபுர் ஷர்மா

பா.ஜ.க-வில் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகத்துக்கு எதிரான சில சர்ச்சை கருத்துக்களை கூறியது பெரும் விவாதமானது. நாள்கள் கடந்தாலும் தற்போது வரை அதன் அதிர்வலை அடங்கவில்லை. ஈராக், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமன், ஈரான், ஜோர்டான், பஹ்ரைன், மாலத்தீவு, ஆஃப்கானிஸ்தான் உட்பட 15-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த சம்பவத்திற்கு எதிராக தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளன. நபிகள் நாயகம் குறித்து அவதூறாக ட்விட்டரில் பதிவிட்ட மற்றொரு பா.ஜ.க நிர்வாகி நவீன் ஜிண்டல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல நடிகர் நசீருதின் ஷா, "இது போன்ற நபர்களுக்கு கொஞ்சம் நல்ல புத்தியை புகட்டுமாறு நான் பிரதமரிடம் நேரடியாக கோரிக்கை வைக்கிறேன். அவர் ரிஷிகேஷின் தர்ம ஸன்ஸாத் படி கூறப்பட்டிருப்பதை நம்பினால் அதை கூறட்டும், நம்பாவிட்டால் அதையாவது கூற வேண்டும். பிரதமர் தலையிட்டு மேலும் இந்த விவகாரத்தில் விஷம் பரவுவதை தடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு எடுத்தது கொஞ்சம் தாமதமான நடவடிக்கை. அவர்கள் வாயைத் திறந்து இதுபோன்ற கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கவே ஒரு வாரம் ஆகியுள்ளது. இதே போன்ற சம்பவம் பாகிஸ்தானிலோ ஆஃப்கானிஸ்தானிலோ நடந்திருந்தால் உடனே மரண தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் இங்கு பாதிக்கப்பட்டிருக்கும் நபிகள் நாயகத்தை பின்பற்றுபவர்களுக்கு ஆறுதல் கூட கிடைக்கவில்லை." எனக் கூறியுள்ளார்.

பாஜக நிர்வாகி நுபுர் ஷர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு மன்னிப்பு கேட்டிருந்தார். அதில் அவர் இந்து கடவுளை சிலர் அவமதித்தாலேயே இவ்வாறு பேசியதாக கூறினார். இதைக் குறிப்பிட்டு பேசிய ஷா, "இதை முறையான மன்னிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது. மறுபடியும் இது போன்ற வெறுப்பான ஒரு பேச்சு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நீங்கள் அமைதியையும் ஒற்றுமையையும் பற்றி பேசிவிட்டு ஒரு வருடம் சிறை தண்டனை பெறுவதும், இனப்படுகொலை செய்துவிட்டு கையில் ஒரு அடியை வாங்குவதும் முற்றிலும் முரண்பாடானது. இங்கு நிறைய இரட்டை தர நிர்ணயம் மற்றும் ஏற்றதாழ்வுகள் உள்ளன." எனக் கூறினார்.

பிரதமர் மோடி

மேலும் இந்த விவகாரம் பற்றி பேசிய நசீருதின் ஷா, இதுபோன்ற விவகாரங்களில் வெறுப்பு மிகவும் அதிகமாக மக்களிடம் பரவுவதில் சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் பங்கு அதிகம் இருப்பதாகக் குறிப்பிட்டார். பா.ஜ.க நிர்வாகி நுபுர் ஷர்மா தொடர்ந்து பல கொலை மிரட்டல்களை சந்தித்து வருகிறார். அது குறித்தும் கண்டனம் தெரிவித்தவர், "நுபுர் ஷர்மாவுக்கு எதிரான இந்த வழி தவறானது. இதுபோன்ற காரணத்தால் தான் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் கலவர நிலையில் உள்ளன" எனக் கூறினார்.


மேலும் படிக்க ``பிரதமர் மோடி தலையிட்டு, விஷம் பரவுவதை உடனே தடுக்க வேண்டும்” - நடிகர் நசீருதின் ஷா
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top