கொரோனாவில் பெற்றோரை இழந்த சிறுமி; கடனை கட்ட சொல்லும் எல்.ஐ.சி! - விளக்கம் கேட்ட நிர்மலா சீதாராமன்

0

கோவிட் தொற்று காரணமாக, பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அவர்களின் வாழ்வு நிலைகுலைந்து போனது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் போபாலைச் சேர்ந்த 17 வயது சிறுமி வனிஷா பதக். கோவிட் தொற்றின் இரண்டாம் அலை சமயத்தில் தன்னுடைய பெற்றோரை இழந்தவர். இப்படிபட்ட சூழலில் தன் தந்தை வாங்கிய கடனை சிறுமியான இவரை அடைக்க சொல்லி தொடர்ந்து எல்.ஐ.சி-யில் இருந்து கடிதம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போபாலைச் சேர்ந்த வனிஷா பெற்றோரை இழந்த பின், தன் தாய்வழி உறவினரோடு வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தம்பியும் உள்ளார். பெற்றோரை இழந்த பின் நடந்த பொதுத்தேர்வில் கூட 99.8% சதவீதத்துடன் தேர்ச்சி பெற்று சாதித்தவர் வனிஷா. இவருடைய தந்தை ஜீதேந்திரா பதக் எல்.ஐ.சி நிறுவனத்தில் ஏஜென்டாக பணிபுரிந்தவர். பணிபுரிந்த காலத்தில் வீட்டுக்காக 29 லட்சத்தை கடனாகப் பெற்றுள்ளார். அவர் இறந்த பின்பு அந்த கடனைத் திரும்ப செலுத்த கூறி தொடர்ச்சியாக நோட்டீஸ்களை வனிஷா பெற்று வருகிறார். கடைசியாக பிப்ரவரி மாதம் அவர் பெற்ற நோட்டீஸில் கடனைத் திருப்பி செலுத்தவில்லை என்றால் சட்டரீதியான நடவடிக்கையை சந்திக்க வேண்டி வரும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்.ஐ.சி நிறுவனத்தை டேக் செய்து இந்த விவகாரம் குறித்து பார்க்கும்படியும், தற்போதைய நிலை குறித்து தனக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து பேசிய வனிஷா, "என்னுடைய தந்தை Million dollar round table club (MDRT) என்ற இன்சூரன்ஸ் க்ளப்பில் உறுப்பினராக இருந்தவர். எங்களுடைய பெற்றோரை 2021-ம் ஆண்டு மே மாதம் இழந்துவிட்டோம். நான், என்னுடைய 11 வயது தம்பி இருவருமே மைனர்கள். எங்களுக்கு வயது குறைவு என்பதால் என் தந்தையின் மாதந்திர பாலிஸி மற்றும் கமிஷன் அனைத்தும் எடுக்க இயலாத நிலையில் உள்ளது. எங்களுக்கு வருமானத்திற்கு எந்த வழியும் இல்லை. கடன்தொகையைத் திரும்ப செலுத்த அவகாசம் தேவை. 18 வயது நிரம்பிய பிறகு செலுத்துவதைப் பற்றி யோசிக்கலாம்." என்றார்.

இதுவரை வனிஷா பலமுறை எல்.ஐ.சி நிறுவனத்திற்கு இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். ஆனால் எந்த தெளிவான பதிலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த குறிப்பிட்ட எல்.ஐ.சி நிறுவன அதிகாரிகளோ வனிஷாவின் கோரிக்கைகள் தலைமை எல்.ஐ.சி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது அங்கிருந்து பதில் வரவில்லை எனக் கூறுகிறார்கள். வனிஷாவைத் தற்போது பொறுப்பேற்று பார்த்து கொள்ளும் வனிஷாவின் மாமா அஷோக் ஷர்மா கூறுகையில், "நான் இரு குழந்தைகளையும் பார்த்து கொள்கிறேன். கடனை திரும்ப செலுத்தும் வகையில் போதுமான நிதி எங்களிடம் இல்லை. வனிஷாவின் தந்தை எல்.ஐ.சி நிறுவனத்துக்காக வேலை செய்தவர். அதனால் எங்கள் கோரிக்கையை நிறுவனம் பரிசீலனை செய்யும் என நினைக்கிறோம். ஆனால் இதுவரை எல்.ஐ.சி-யிடம் இருந்து எழுத்து வடிவில் முறையாக எந்த பதிலையும் பெறவில்லை" என்கிறார்.


மேலும் படிக்க கொரோனாவில் பெற்றோரை இழந்த சிறுமி; கடனை கட்ட சொல்லும் எல்.ஐ.சி! - விளக்கம் கேட்ட நிர்மலா சீதாராமன்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top