அரைஞாண் கயிறு; அணிந்துகொள்வதன் பின்னிருக்கும் ஆரோக்கியக் காரணி என்ன?

0

ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, பிறந்த சில நாள்களிலேயே அரைஞாண் கயிற்றைக் கட்டிவிடுவார்கள். எதற்காக இந்தக் கயிறு கட்டப்படுகிறது, இதனால் ஏதேனும் நன்மை உண்டா என்ற சந்தேகங்கள் நம் மனதில் ஒருமுறையாவது தோன்றியிருக்கும். இது குறித்த சந்தேகங்களுக்கு பதில் தெரிந்துகொள்ள சித்த மருத்துவர் வேலாயுதத்திடம் பேசினோம்.

new born

"அரைஞாண் கயிறு ஆதிகாலத்தில் இருந்து மனிதர்கள் பயன்படுத்தி வரும் ஒரு கருவி என்றே சொல்லலாம். ஆதிமனிதன் தனது அடிப்படை ஆடையான கோவணத்தைக் கட்டுவதற்கு அடி ஆதாரமாக இருந்தது அரைஞாண் கயிறுதான். ’அரை’ எனும் இடுப்புப் பகுதிக்கு பழந்தமிழ் சொல்லில் 'கூபக அறை', அதாவது இடுப்பு எலும்புப் பகுதிக்கு 'கூபக அறை' என்று பெயர். 'ஞாண்' என்றால் வளைத்துக் கட்டுவது எனவும், கூபக அறையை வளைத்துக் கட்டுவதால் இக்கயிற்றுக்கு 'அரைஞாண் கயிறு' என்றும் பெயர்.

ஆண்கள் கோவணம் கட்டும் வழக்கத்தை வைத்திருந்ததால் அரைஞாண் கயிற்றைப் பயன்படுத்தினர். மனிதன் வேட்டை சமூகமாக மாறிய பிறகு வேட்டைக்குச் சொல்லும்போது வேட்டைக் கருவிகளைக் கட்டிவைக்கும் பயன்படுபொருளாக இருந்தது.

மருத்துவ காரணங்கள்:

ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள், விதைப்பையிலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள் ஒன்று சேரும் இடம் உடலின் அடிவயிற்றுப்பகுதிதான். அதைச் சுற்றியே அரைஞாண் கயிற்றைக் கட்டுவார்கள். அப்போது தான் மேல்வயிற்றுப் பகுதியிலுள்ள குடல் இறங்காமல் இருக்கும்.

மரத்திற்கு மரம் தாவுவது, மரம் ஏறுவது, குதிப்பது உள்ளிட்ட கடின வேலைகளைச் செய்யும்போது, விதைப்பைகள் மேலேறும் வாய்ப்புகள் அதிகம். விதைப் பையைப் பாதுகாக்கவும் வயிற்றின் உள்உறுப்புகள் மேல் ஏறாமல் தடுக்கவும்தான் அரைஞாண்கயிறு. அரைஞாண்கயிறு கட்டுவதால் சிறுநீர்ப்பை, மலப்பைகளுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

அறிவியல் உலகில் அரைஞாண் கயிற்றின் அவசியம்

பழம்பெரும் மரபு பழக்கவழக்கங்கள் எல்லாம் அறிவியலுக்கு புறம்பானது என்ற பார்வை இருக்கிறது. முன்னோர்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்களின் பின்னணியில் ஆழ்ந்த அறிவியல் இருக்கிறது என்பதை உணராதவர்கள்தான் இது தேவையில்லை என்று நினைக்கிறார்கள். உள்ளாடைகளைத் தாண்டி உள்ளுறுப்புகளைப் பாதுகாப்பதற்கு அரைஞாண் கயிறு அவசியமானது.

சித்த மருத்துவர் வேலாயுதம்

கட்டாவிடில் என்னவாகும்?

பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு அணிவித்துவிடுவார்கள். ஆனால் வளர வளர பெரும்பாலான ஆண்கள் இதை காட்டுவதில்லை. ஆனால் இதையும் அவசியமான உள்ளாடை போல ஆண்கள் அணிய வேண்டும். அரைஞாண் கயிற்றை கட்டவில்லையென்றால் விரைவாதம், அண்டவாதம் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. இன்றைய இளைஞர்கள் இதனைக் கட்டாயம் அணிய வேண்டும். இது வாழ்வியலோடு தொடர்புடைய ஓர் ஏற்பாடாகும்.

கறுப்பு, சிவப்பு நிறங்களில் இதை அணிவதேன்?

அக்காலத்தில் மக்கள் இனக் குழுக்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். தங்கள் அடையாளத்தை காட்டிக்கொள்ள கறுப்பு, சிவப்பு போன்ற பல்வேறு நிறங்களில் அணிந்தனர். எந்த நிறமும் இல்லாமல் வெள்ளை நூலிலேயே அரைஞாண் வழக்கமும் அக்காலத்தில் இருந்தது. பிற்காலத்தில் குலதெய்வத்தை வணங்குபவர்கள் கறுப்புக் கயிறும், வைணவத்தைப் பின்பற்றுபவர்கள் சிவப்புக் கயிற்றையும் கட்டி அடையாளப்படுத்திக் கொண்டனர்.

கயிறு

நாம் வெப்ப மண்டல நாடு என்பதால் கறுப்பு நிறத்தை உடைகளில் அணிவதை, அதிகளவு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கறுப்பு வெப்பத்தை உறிஞ்சி உடலுக்கு கெடுதல் விளைவிக்கும். எனவே, சிவப்பு நிற அரைஞாண் கயிறு கட்டுவது சிறந்தது.

தங்கத்திலும், வெள்ளியிலும் அணியலாமா?

வசதியிருப்பவர்கள் தங்கத்திலும், வெள்ளியிலும் அணிகின்றனர். வெள்ளியில் அணியும்போது உடலிலுள்ள சூட்டைத் தணிக்கும் என்ற கருத்தும் உண்டு. ஏனெனில் அது ஒரு குளிர்ச்சியான உலோகம். அரைஞாண் கயிற்றை நூலிலோ, உலோகத்திலோ கட்டுவது நல்லது.

தங்கம், வெள்ளி

பெண்களும் அணிய வேண்டுமா?

பெண்களுக்குப் பெரும்பாலும் அரைஞாண் கயிறு தேவைப்படாது. குடல் கீழறக்கம் பிரச்னை பெண்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. பெண்களுக்கு இது அவசியப்படாததால் இதை அணியத் தேவையில்லை என்று சொல்லப்படுகிறதே தவிர, இதை தவிர்ப்பதற்கு வேறு மருத்துவக் காரணங்கள் எதுவும் இல்லை.


மேலும் படிக்க அரைஞாண் கயிறு; அணிந்துகொள்வதன் பின்னிருக்கும் ஆரோக்கியக் காரணி என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top