உ.பி: மருத்துவமனை அலட்சியம்; பிறந்து மூன்றே நாளான குழந்தை எறும்பு கடித்து பலி? - விசாரணைக்கு உத்தரவு

0

உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா(Mahoba) மாவட்டத்தில் உள்ள முதாரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர ரைக்வார் (Surendra Raikwar). இவரின் மனைவி சீமாவை(Seema) பிரசவத்துக்காக அந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

குழந்தை

கடந்த மே 30-ம் தேதி இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவரால் அந்த குழந்தையை பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) அனுமதித்தனர்.

குழந்தை இருந்த வார்டு மிகவும் அழுக்காகவும், எறும்புகள் இருந்ததாகவும் குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனை ஊழியர்களிடமும், அங்கிருந்த மருத்துவர்களிடமும் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அதுகுறித்து யாரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

NICU Ward

இந்தநிலையில், குழந்தை திடீரென இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மருத்துவமனை அலட்சியத்தின் காரணமாகவே எறும்பு கடித்து பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதாகக் குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

பிரசவம் பார்ப்பதற்கு அந்த மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் 6,500 ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். மருத்துவமனைக்கு விரைந்து வந்த கோட்வாலி(Kotwali) பகுதி போலீஸார் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.

மேலும், தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். பிறந்து மூன்றே நாளான பச்சிளம் குழந்தை எறும்பு கடித்து உயிரிழந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க உ.பி: மருத்துவமனை அலட்சியம்; பிறந்து மூன்றே நாளான குழந்தை எறும்பு கடித்து பலி? - விசாரணைக்கு உத்தரவு
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top