மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசம் - அருப்புக்கோட்டையில் நர்சிங் கல்லூரி சேர்மன் கைது!

0

அருப்புக்கோட்டை தெற்குத் தெருவில் தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக்கல்லூரி அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகர் செல்லும் சாலையில் செயல்பட்டு வந்தது. பின்னர் தீ தடுப்பு உள்ளிட்ட முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை எனக்கூறி 2017-ம் ஆண்டு கல்லூரிக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பின்னர் மீண்டும் அதே ஆண்டில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையுடன் முறையான அரசு அனுமதி பெற்று தெற்குத்தெருவில் வாடகைக்கட்டடத்தில் கல்லூரி இயங்கத் தொடங்கியது. இக்கல்லூரியில் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் அதிகம் பயின்று வருகின்றனர்.

பாலியல்

இந்நிலையில் இக்கல்லூரியின் சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அதேக்கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவிக்கு, வீடியோக்கால் செய்து நிர்வாணமாக வந்ததுடன், ஆபாசமாக பேசியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

அந்த வீடியோ, தற்போது அந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவ - மாணவிகளின் செல்போனுக்கு திடீரென பரவியதால் கல்லூரி மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் நர்சிங் கல்லூரியும் நேற்று மூடப்பட்டிருந்ததால் கல்லூரிக்கு வந்த மாணவிகள் கல்லூரி வாயிலில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸை அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். எனினும் கல்லூரி மாணவிகள் தங்களின் படிப்புக்கும், எதிர்காலத்திற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் கல்லூரிக் கட்டணத்தையும், சான்றிதழ்களையும் திரும்பத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பழையப்பேருந்து நிலையம் செல்லும் சாலையில் மீண்டும் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மறியலில் ஈடுபட்டதால் மதுரை - விருதுநகர் செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் சகாயஜோஸ், வட்டாட்சியர் அறிவழகன், நகர் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் மாணவிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்றுக்கொண்ட மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்ந்து, வீடியோக்காலில் மாணவியிடம் நிர்வாணமாக பேசிய கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச்சட்டம், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதோடு அவரிடருந்து செல்போன், லேப்டாப் உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்தசம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவ - மாணவியர்கள் மாவட்ட ஆட்சியரை முறையிட்டு உரிய நீதி பெற்றுதர வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலியல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தனியார் கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான்கிரேஸ், பாஜக சிறுபான்மை பிரிவு முன்னாள் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசம் - அருப்புக்கோட்டையில் நர்சிங் கல்லூரி சேர்மன் கைது!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top