``அண்ணாமலை முதலில் தன் முதுகை பார்க்கட்டும்..!” - அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியது எதற்காக?

0

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் அருகே இலங்கை தமிழர்களுக்காக புதிய வீடுகள் கட்டப்பட்டு வரும் இடத்தைப் பார்வையிட்டார். இதையடுத்து வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்த மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.

ஐ.பெரியசாமி

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தமிழக பாஜக தலைவர் சுயலாபத்திற்காக, மத்திய அரசு மூலம் பதவிகளை எதிர்பார்த்து, இப்போது தமிழக அரசு மீது குற்றம் சாட்டி அவதூறு பிரசாரம் செய்து வருகிறார். அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை வெளியிடுவேன் எனக் கூறி வருகிறார். புலி வருது புலி வருது என்று என்று கூறி பூனை கூட வராது. தமிழ்நாட்டு மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் தமிழக மக்களிடையே யாராலும் பிரிவினை ஏற்படுத்த முடியாது.

பா.ஜ.க., மாநிலத் தலைவர் அண்ணாமலை முதலில் தனது முதுகை பார்க்க வேண்டும். மத்திய அரசு கூறிய எந்தத் திட்டமும் தற்போது வரை இந்தியாவில் உள்ள பொதுமக்களுக்கு சென்றடையவில்லை. அதேபோல் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட பணத்தைக் கூட மீண்டும் பிடுங்கியது மத்திய அரசு. அதேபோல் ஒருவர் ஊழல் செய்திருந்தால் அவரை தண்டிப்பதற்கு நீதிமன்றம் உள்ளது. ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல் நிலையம் மூலம் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும்.

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

தமிழக முதல்வர் தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வு ரத்து செய்யுங்கள் என்று சொல்லவில்லை. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவ-மாணவியரின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். அதேபோல் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு தமிழகத்தில் எத்தனை நபர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். தற்போது கூட மதுரை மற்றும் தமிழகம் முழுவதும் மத்திய அரசு பல பணிகளுக்கு பணியாளர்களை அமர்த்தி உள்ளது. அதில் தமிழகத்தில் இருந்து சுமார் 15 நபர்கள் மட்டுமே பணிக்கு சென்றுள்ளனர்.

ஐ.பெரியசாமி

தமிழக அரசைக் குறைகூறும் அண்ணாமலை முதலில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் மக்களுக்கு சேர்ந்து விட்டதா அதேபோல் தேர்தல் சமயத்தில் பிரதமர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா, தமிழ்நாட்டில் மக்கள் எத்தனை பேர் மத்திய அரசுப் பணிக்கு சென்றுள்ளனர் என்பதையும் பார்க்க வேண்டும். ஆகவே சுயநலத்திற்காகவும் பதவிக்காகவும் தமிழ்நாட்டு முதல்வரையும் ஆட்சியையும் குறை கூறும் அண்ணாமலை முதலில் அவரின் முதுகை பார்க்கட்டும்” என்றார்.


மேலும் படிக்க ``அண்ணாமலை முதலில் தன் முதுகை பார்க்கட்டும்..!” - அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியது எதற்காக?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top