Doctor Vikatan: தூசு, புகை, வாசனை அலர்ஜி; நிரந்தரத் தீர்வு உண்டா?

0

Doctor Vikatan: என் வயது 26. சின்ன வயதில் இருந்தே தூசு, புகை, அதிகமான வாசனை போன்றவற்றால் தும்மல் வரும். சோப்பு போட்டு முகம் கழுவக்கூட முடியாது. உடனே தும்மல் வந்துவிடும். இப்போது என்னுடைய 6 வயது மகனுக்கும் அதே அலர்ஜி பிரச்னை இருக்கிறது. எங்கள் இருவருக்கும் இந்த அலர்ஜியை குணப்படுத்த முடியுமா?

-சாரா பானு சாரா

ஒவ்வாமை

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் வடிவேலு ஸ்ரீனிவாசன்...

சுற்றுச்சூழல் மாசு, இயந்திரமயமாக்குதல், திடீர்திடீரென மாறும் வானிலை போன்றவற்றால் இன்று பலரும் அலர்ஜி பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். இவற்றால் ஈஸ்னோபில் (eosinophils) எண்ணிக்கையும், ரத்தத்தில் சீரம் ஐஜிஇ (serum IgE) அளவுகளும் அதிகரிக்கும்.

அதனால் உடலின் பிற செல்களும் பாதிக்கப்பட்டு, அலர்ஜி பிரச்னை வரும். அதன் வெளிப்பாடாக, மூக்கில் இருந்து நீர் வடிதல், கண்களில் அரிப்பு, மூச்சு விடுவதில் சிரமம், இருமல் போன்றவை வரலாம். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பலரும் இதனால் அவதிக்குள்ளாகிறார்கள்.

நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் வடிவேலு ஸ்ரீனிவாசன்

பாதிப்புள்ள நபர்கள், மருத்துவரின் ஆலோசனையோடு ரத்தத்தில் சீரம் ஐஜிஇ மற்றும் ஈஸ்னோபில் அளவுகளைப் பரிசோதிக்க வேண்டும். சிலருக்கு இரண்டுமே அதிகமாக இருக்கலாம். அடுத்து ஸ்கின் ப்ரிக் டெஸ்ட் என்ற ஒன்று செய்யப்படும். எந்தெந்த உணவுகளைச் சாப்பிடுவதால் அலர்ஜி வருகிறது என்று குறிப்பெடுக்க வேண்டும். காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

இன்ஹேலர், பிராங்கோ டைலேட்டர்ஸ் போன்றவை பரிந்துரைக்கப்படும். மூக்கின் வழியே உபயோகப்படுத்தும் நேசல் ஸ்பிரே, இரவில் பயன்படுத்தக்கூடிய மாத்திரைகள் போன்றவையும் பரிந்துரைக்கப்படும்.

சிலருக்கு அவர்கள் உபயோகிக்கும் சோப், பெர்ஃபியூம், வீட்டிலுள்ள தூசு போன்றவற்றால் ஒவ்வாமை தீவிரமாகும். அலர்ஜிக்கு காரணமான விஷயத்தைக் கண்டறிந்து மருத்துவர் உங்களுக்கான சிகிச்சையைப் பரிந்துரைப்பார். 'பயலாஜிகல்' எனப்படும் இந்தச் சிகிச்சையில் மூன்றுவிதமான ஊசிகள் பரிந்துரைக்கப்படும். உங்கள் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து, ஒரு வருடம் வரை இந்த சிகிச்சையைத் தொடர வேண்டியிருக்கும்

மாசு

இது சற்று காஸ்ட்லியான சிகிச்சை. சில மருந்துகளை ஆறு மாதங்கள் முதல், ஒரு வருடம்வரை உபயோகிக்க வேண்டியிருக்கும்.

இந்தச் சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருந்து கம்பெனிகள் சில சலுகைகளைக் கொடுக்கிறார்கள். அது குறித்த விவரங்களை உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அவ்வப்போது ரத்தப் பரிசோதனை செய்து, ஒவ்வாமைக்கான காரணிகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவா என்று தெரிந்து கொள்ளலாம். முறையான சிகிச்சை பின்பற்றப்பட்டால், இந்தப் பிரச்னையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம், பயப்பட வேண்டாம்.


மேலும் படிக்க Doctor Vikatan: தூசு, புகை, வாசனை அலர்ஜி; நிரந்தரத் தீர்வு உண்டா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top