Formula E Race: அதிவேக ஃபார்முலா எலெக்ட்ரிக் கார் ரேஸ் - இந்தியாவில் முதன்முறையாக ஹைதராபாத்தில்!

0
தெலங்கானா மாநிலம்தான் இந்தியாவில் எலெக்ட்ரிக் மொபிலிட்டிக்கு ரொம்பவும் முன்னுரிமை கொடுக்கும் மாநிலமாக இருக்கிறது. இந்தியாவில் டெஸ்லாவைக் கொண்டு வர எலான் மஸ்க்குக்கு சமூகவலைதளங்களில் முதன் முதலில் வலை போட்டது தெலங்கானா தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ்தான்.

இப்போது உலகின் அதிவேகமான ஃபார்முலா–1 கார் ரேஸ்களுக்கும் அடித்தளம் போட இருக்கிறது தெலங்கானா. அது சரி; எலெக்ட்ரிக்குக்கும் இந்த ஃபார்முலா கார் ரேஸுக்கும் என்ன சம்பந்தம்? ஆம், இந்த ஃபார்முலா கார் ரேஸ், ஒரு சுத்தமான எலெக்ட்ரிக் ரேஸ். மணிக்கு 300 கிமீ வேகத்தில் ‘வ்வ்வ்ர்ர்ரூம்’ என காதைக் கிழிக்கும் சத்தத்துடன் பறக்கும் கார்கள்தான், ஃபார்முலா 1–ன் அழகே! அதே கார்கள், சத்தமே போடாமல், அதே வேகத்துடன், எக்ஸாஸ்ட் புகையே இல்லாமல்… ட்ராக்கில் ஓடினால் எப்படி இருக்கும்! அதுதான் எலெக்ட்ரிக் ஃபார்முலா கார் ரேஸ்.

மிட்ச் ஈவன்ஸ்

இதைத்தான் ‘ஃபார்முலா–இ’ கார் ரேஸ் என்கிறார்கள். அஃபீஷியலாக இதை `ABB FIA Formula E’ வேர்ல்டு சாம்பியன்ஷிப் ரேஸ் என்று அழைக்கிறார்கள். இப்போது ஃபார்முலா இ ரேஸின் 8–வது சீஸன் மெக்ஸிகோ, சவுதி, கனடா, அமெரிக்கா, தெற்கு கொரியா, இத்தாலி, லண்டன் என்று பல நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த வாரம் இந்தோனேஷியாவில் நடந்த 8–வது ரவுண்டில், ஜாகுவார் TCS டீமைச் சேர்ந்த மிட்ச் ஈவன்ஸ் என்பவர், முதலாம் இடம் வந்திருக்கிறார். ஜகார்த்தாவில் நடந்த இந்தப் போட்டியின் 60,000 பார்வையாளர்களில் இந்தோனேஷியப் பிரதமரும் கூட்டத்தோடு கூட்டமாக வந்து போட்டியைக் கண்டு ரசித்திருக்கிறார் என்றால், இந்த விளையாட்டின் மகத்துவம் புரியும்.

அப்படிப்பட்ட எலெக்ட்ரிக் ஃபார்முலா கார் ரேஸ், இந்தியாவுக்கு வந்தால் நமக்குப் பெருமைதானே! ஏற்கெனவே, ஃபார்முலா–1 ரேஸ், தலைநகர் டெல்லியில் உள்ள புத் ரேஸ் ட்ராக்கில் நடந்தபோது, மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்கள் மொத்தமும் இந்தியாவுக்குப் படையெடுத்தார்கள். ஃபார்முலா–1 கார் ரேஸ், நம் நாட்டு ஐபிஎல்–க்கு இணையாக, உலகம் முழுதும் பெரிய ரசிகர் பலம் கொண்ட காஸ்ட்லியான ஒரு மோட்டார் ஸ்போர்ட்ஸ்.

ரசிகர்கள் நடுவில் மிட்ச் ஈவன்ஸ்...
இதற்கான ரேஸ் ட்ராக்கைச் சத்தமே இல்லாமல், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உருவாக்கி வருகிறார்கள். அடுத்த ஆண்டு, பிப்ரவரி மாதம் 11–ம் தேதி என இதற்கான தேதியையும் குறித்து விட்டார்கள். மஹிந்திரா ரேஸிங் டீமின் CEO, தில்பாக் கில் இதை அறிவித்தும் விட்டார்.

‘‘இந்த ரேஸ் ட்ராக் மிகவும் அருமையாக உள்ளது. இதன் கட்டமைப்பு பிரமாதம். ஒரு வேர்ல்டு க்ளாஸ் ஷோவுக்கு இந்தியா ரெடியாக இருக்கிறது. இது ஃபார்முலா காலண்டரில் அதிவேகமான ட்ராக்காகவும் இருக்கப் போகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தெலங்கானா அரசிடம் நடந்து கொண்டிருக்கிறது!’’ என்கிறார் தில்பாக் கில்.

பொதுவாக, சில கார் ரேஸ்கள் ரேஸ் ட்ராக்கோடு சேர்த்து நகரத்தின் முக்கியத் தெருக்களிலும் பொது மக்களுக்குத் தொந்தரவில்லாமல் நடக்கும். ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’, ‘ரஷ்’ போன்ற ஹாலிவுட் படங்களில், தெருக்களில் நடக்கும் இந்த ரேஸ்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அதேபோல், ஹைதராபாத்தின் ஒரு ஏரியைச் சுற்றி மிகப் பிரம்மாண்டமாக ஒரு ரேஸ் ட்ராக்கை உருவாக்கி வருகிறார்கள். மாலை நேர லைட்டிங் செட்–அப்போடு இதை நடத்தத் திட்டமும் இருக்கிறது. ‘‘நகரத்துக்குள் நடந்தாலும், பொதுமக்களுக்குத் தொந்தரவு இருக்காது!’’ என்கிறார் கில்.

Formula E Race
இப்போதைக்கு ஃபார்முலா இ ரேஸ்களில் பங்காற்றும் ஒரே ஒரு இந்தியன் ரேஸிங் அணி மஹிந்திரா ரேஸிங் டீம் மட்டும்தான். மஹிந்திரா ரேஸிங் 2014–ல் இருந்து செம சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. உலகத்தரம் வாய்ந்த மெர்சிடீஸ், போர்ஷே, நிஸான் வரிசையில் இந்தியாவில் மஹிந்திரா ரேஸிங் இருப்பது மிகவும் பெருமை வாய்ந்த விஷயம்.

ரேஸிங் டீம் என்பது இந்தியன் அணியாக இருந்தாலும், இதில் ஒரு சோகமான விஷயம் – நம் இந்திய டிரைவர்கள் யாரும் இல்லை என்பதே! முதல் சீஸனில் கருண் சந்தோக் என்பவருக்குப் பிறகு, இந்திய டிரைவர்களுக்குப் பஞ்சமாக இருக்கிறது.

இப்போதைக்கு தேஹன் தருவாலா, அர்ஜுன் மைனி, அவரது சகோதரர் குஷ் போன்றவர்களை ரேங்க் பட்டியலில் இருக்கிறார்கள். ஆனால், இவர்களால் இந்தியன் டீமுக்கு கப் அடித்துத் தர முடியுமா என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறது மஹிந்திரா ரேஸிங் டீம்.

இந்தியன் ரேஸர்கள் யாராச்சும் இருக்கீங்களா… ஃபார்முலா இ கார் ரேஸுக்கு!


மேலும் படிக்க Formula E Race: அதிவேக ஃபார்முலா எலெக்ட்ரிக் கார் ரேஸ் - இந்தியாவில் முதன்முறையாக ஹைதராபாத்தில்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top