Sir M.Visvesvaraya Terminal: விமான நிலையம் போல பெங்களூரில் ரயில் முனையம்; என்னென்ன சிறப்பம்சங்கள்?

0

பெங்களூருவில் மூன்றாவது ரயில் முனையமாக உருவாகியிருக்கும் 'சர் எம் விஸ்வேஸ்வரய்யா ரயில் முனையம்' வழக்கமான ரயில் சந்திப்பு நிலையம் போல இல்லாமல் விமான நிலையம் போல அதிநவீனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நேற்று முதல் (ஜூன் 6) இதன் செயல்பாடு தொடங்கியிருக்கும் நிலையில் இதில் உள்ள வசதிகளை வேறு எந்த ரயில் நிலையத்திலும் காண முடியாது. பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியோடு புதிய ரயில் முனையத்தைப் பார்வையிட்டனர்.

இந்தத் திட்டத்திற்காக 314 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. விமான நிலையத்தைப் போலவே காட்சியளிக்கும் நுழைவாயில், பயணிகள் காத்திருக்கும் பொதுத்தளம், ரியல்-டைம் பேசஞ்சர் தகவல் அமைப்பு, விஐபி காத்திருப்பு அறை, உணவுக்கான பிரத்யேக இடம் என இதன் வசதிகளைப் பட்டியலிடலாம்.

சர் எம் விஸ்வேஸ்வரய்யா ரயில் முனையம்

குளிரூட்டப்பட்ட இந்த ரயில் முனையம் அதிநவீன வசதிகள் தாண்டி சோலார் ரூப்டாப் பேனல்ஸ், மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் என அசத்தும் வகையில், இயற்கைக்கு உகந்த வடிவமைப்பில் உருவாகியிருக்கிறது. இந்த ரயில் முனையம் பெங்களூருவில் பனஸ்வாடிக்கும் பையப்பனஹள்ளிக்கும் இடையில் 4200 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது.

250 நான்கு சக்கர வாகனங்கள், 900 இருசக்கர வாகனங்கள் அளவுக்கு பார்க்கிங் வசதி உண்டு. 32 இணை ரயில் சேவைகள் இங்கிருந்து திட்டமிடப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் மூன்று சேவைகள் தொடங்கப்பட உள்ளன. வாரத்திற்கு மூன்று நாள்கள் எர்ணாகுளம் செல்லும் ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது. Kochuveli Bi-Weekly Humsafar Express ரயில் சேவை ஜூன் 10 முதல் இயக்கப்படவுள்ளது. இதே போல பெங்களூரு முதல் பாட்னா வரை செல்லும் weekly Humsafar Express ரயில்கள் ஜூன் 11 முதல் இயக்கப்படவுள்ளன.


மேலும் படிக்க Sir M.Visvesvaraya Terminal: விமான நிலையம் போல பெங்களூரில் ரயில் முனையம்; என்னென்ன சிறப்பம்சங்கள்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top