லஞ்ச ஒழிப்புத்துறையினருடன் இணைந்த வருவாய், பொதுப்பணித்துறையினர்... கொதித்த தங்கமணி!

0

நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தற்போது குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அதோடு, அ.தி.மு.கவில் அமைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், இவரின் வீடு, உறவினர்கள் வீடு, அலுவலகம், தொழிற்கூடங்களில் கடந்த டிசம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், கணக்கில் வராத வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அமைச்சர் பதவியில் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கமணி, அவரின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், அப்போது 69 இடங்களில் நடைபெற்ற சோதனையில் சொத்து ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

அளவீடு செய்யும் பணி

தொடர்ந்து அதுகுறித்து விசாரணை நடந்து வந்த நிலையில், சொத்து ஆவணங்கள் குறித்து விசாரணை செய்து அதனை மதிப்பிடும் பணியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். 15 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்கமணி வசித்து வரும் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள கோவிந்தபாளையத்தில் உள்ள அவரின் பூர்வீக வீட்டையும் வீட்டிலுள்ள பொருட்கள், அதற்கான ஆவணங்கள் குறித்தும் ஆய்வு செய்தும், அதனை மதிப்பீடு செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். ஆனால், `தங்கமணி வீட்டில் மீண்டும் ரெய்டு' என்று புரளி கிளம்பியதால், அங்கு அ.தி.மு.கவினர் குவிந்தனர். ஆனால், ஏற்கனவே நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து, வீடு மற்றும் பொருட்களை மதிப்பீடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி,

"கடந்த 15.12.2021-ல் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் என் வீடு சோதனை செய்யப்பட்டதின் அடிப்படையில், கிட்டத்தட்ட 60, 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு கட்டடத்தை ஆய்வு செய்வதற்காகவும், அளப்பதற்காகவும், அதன் மதிப்பீட்டை எடுப்பதற்காகவும் பொதுப்பணித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, வருவாய்த்துறை ஆகிய மூன்று துறை அதிகாரிகளும் வந்திருக்காங்க.

அளவீடு செய்யும் பணி

காலையில் இருந்து என்னோட வீடு, அலுவலகம், தொழிற்சாலை ஆகிவற்றை அளவீடு செஞ்சுருக்காங்க. தொழிற்சாலையை பொறுத்தவரை, நான் பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்டது. ஆனால், வேண்டுமென்றே அதை இன்று அளவீடு எடுத்து, பொதுமக்கள் மத்தியில் எனக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருக்கிறது. இதை சட்டப்படி சந்திப்போம்" என்றார்.


மேலும் படிக்க லஞ்ச ஒழிப்புத்துறையினருடன் இணைந்த வருவாய், பொதுப்பணித்துறையினர்... கொதித்த தங்கமணி!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top