``என்கவுன்டர்; உ.பி-க்கு ஐந்து படிகள் மேலே செல்வோம்” - கர்நாடக அமைச்சர் பேச்சு

0

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜ.க யுவமோர்ச்சா மாவட்டச் செயலாளராக இருந்த பிரவீன் நெட்டாரு கடந்த 26-ம் தேதி கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏடிஜிபி அலோக் குமார் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஊடகவியலாளர்களிடம், "யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேசத்தில் பயன்படுத்தும் மாதிரியை வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகப் பயன்படுத்தத் தயார்" எனத் தெரிவித்திருந்தது சர்ச்சையானது.

கொலைசெய்யப்பட்ட பிரவீன் நெட்டாரு

இந்த நிலையில், கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் செய்தியாளர்களிடம், "யோகி ஆதித்யநாத் மாதிரியை வகுப்பு சக்திகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்போவதாக முதல்வர் கூறியிருக்கிறார். நாம் ஏன் உத்தரப் பிரதேசத்தை மாதிரியாக கருத வேண்டும். அதைவிட ஐந்து படிகள் மேலே செல்வோம். குற்றம் சாட்டப்பட்டவர்களை என்கவுன்டர் செய்யுங்கள். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்பதே மக்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தின்படியே நடவடிக்கை இருக்கும். உ.பி.யை விட சிறந்த மாதிரியைத் தருவோம். கர்நாடகா முற்போக்கான மாநிலம், முன்மாதிரி மாநிலம், எனவே நாம் யாரையும் பின்பற்றத் தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.

பசவராஜ் பொம்மை

ஏற்கெனவே, யோகி மாதிரி என்பது குற்றம்சாட்டப்பட்ட சிறுபான்மையினர்களுக்குச் சிறைச்சாலை அல்லது புல்டோசர்களைப் பயன்படுத்தி அவர்களின் வீடுகளை இடிப்பது போன்ற கடுமையான நடவடிக்கையை விவரிக்கிறது என விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் குற்றவாளிகளை என்கவுன்டர் செய்யக் கூறிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க ``என்கவுன்டர்; உ.பி-க்கு ஐந்து படிகள் மேலே செல்வோம்” - கர்நாடக அமைச்சர் பேச்சு
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top