பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது; 28 ஆண்டுகளுக்குப்பின் விடுதலை - அரசுக்கு இந்தியர் வைத்த கோரிக்கை

0

பாகிஸ்தானில் 28 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வந்த நபர் ஒருவர், குஜராத்தில் தன் சகோதர, சகோதரிகளுடன் இணைந்த சம்பவம் குடும்பத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குல்தீப் யாதவ்(59) என அறியப்படும் இவர், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, 1994-ல் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து கடும் சிறைவாசம் அனுபவித்து வந்த குல்தீப் யாதவ், ஒருவழியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு அகமதாபாத்தில் தன்னுடைய சகோதர, சகோதரிகளுடன் மீண்டும் இணைந்திருக்கிறார்.

சிறை

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி விடுதலையான குல்தீப் யாதவ், ஆகஸ்ட் 25-ம் தேதி அகமதாபாத்தில் தன் குடும்பத்துடன் இணைந்தார். விடுதலையான குல்தீப் யாதவ், தன்னைப்போல் பாகிஸ்தான் சிறையில் வாடும் மற்ற நபர்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்

இதுகுறித்து தன்னுடைய சகோதரி வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய குல்தீப் யாதவ், ``எங்களை விடுவிக்குமாறு பாகிஸ்தான் அரசிடமும், சிறை அதிகாரிகளிடமும் நாங்கள் கோரிக்கை விடுக்கும்போதெல்லாம், `இந்திய அரசு எங்களை ஏற்கவில்லை’ என்று ஒரே ஒரு விஷயத்தைத் தான் அவர்கள் சொல்வார்கள். இந்திய அரசு எங்களை ஏற்காதபோது, ​​விடுதலை என்பது எங்களுக்குக் கடினமாகிவிடும்.

இந்தியா - பாகிஸ்தான்

என்னைப்போலவே சிறையில் பலரும் சித்திரவதைக்குள்ளாகும்போது, ​​அவர்களின் வாழ்க்கையே வீணாகிறது. ஒருகட்டத்தில் அவர்களால் தங்களின் பெயர்களைக்கூட நினைவுகூர முடியவில்லை. அவர்கள், தங்களின் பெயர்களை வேண்டுமானால் மறந்திருக்கலாம், ஆனால் அவர்களும் இந்தியர்களே. இன்று என் குடும்பத்துடன் இணைந்தது மூலம் எனக்குக் கிடைத்த அதே மகிழ்ச்சி, அங்கு வாடிக்கொண்டிருக்கும் இந்தியக் கைதிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு, பாகிஸ்தான் சிறையிலிருக்கும் இந்தியர்களுக்குப் பதில் இங்கு சிறையிலுள்ள பாகிஸ்தான் கைதிகளை இந்திய அரசு விடுவிக்க வேண்டும். மேலும், எவ்வளவு காலம் தான் நானும் என் சகோதர, சகோதரிகளைச் சார்ந்து இருப்பேன்? என் உடம்பில் இருக்கும் சட்டை கூட பாகிஸ்தானைச் சேர்ந்தது தான், எனக்குச் சொந்த உடை கூட இல்லை. எனவே என்னுடைய மறுவாழ்வுக்கும் உதவுமாறு அரசாங்கத்துக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்" எனக் கூறினார்.


மேலும் படிக்க பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது; 28 ஆண்டுகளுக்குப்பின் விடுதலை - அரசுக்கு இந்தியர் வைத்த கோரிக்கை
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top