திண்டுக்கல்: மிளகாய் பொடி தூவி ரூ.2 லட்சம் கொள்ளை; நாடகமாடினார்களா டாஸ்மாக் ஊழியர்கள்?!

0

​திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி அரசு டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாள​ர் முருகன்​. சித்தூர்​ அரசு டாஸ்மாக்​ கடையின்​ மேற்பார்வையாளர் அழகுமணி​. இருவரும் தங்கள் கடைகளில் மது​ ​விற்பனை​ செய்த​ பணத்தை எடுத்துக்கொண்டு ​வங்கியில் செலுத்தச் சென்றபோது, இவர்கள் மீது மிளகாய் பொடி தூவி 2 லட்ச ரூபாயை இரண்டு பேர் சேர்ந்து கொள்ளைடித்து சென்றதாக பட்டிவீரன்பட்டி போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

காவல்நிலையத்தில் டாஸ்மாக் ஊழியர்கள்

அதில், தாங்கள் ​ஒ​ரே பைக்கில் சரக்கு விற்பனை பணத்தை வத்தலக்குண்டு வங்கி​யில் செலுத்தச் சென்றோம். எம்.வாடிப்பட்டி குறுக்கு சாலையில் ​சென்று​ கொண்டிருந்தபோது​​ பின்னால் ​பைக்கில் பின் தொடர்ந்த ​வந்த இளைஞர்கள்​ 2 பேர்​ ​எங்கள் ​​பைக்கின் மீது மோதினர்​. இதில் 2 பைக்களும் நிலைதடுமாறி கீழே விழுந்தது.

டாஸ்மாக் நிறுவனம்

அப்போது கீழேவிழுந்துகிடந்த எங்கள் இருவ​ரையும் ​​​தூக்குவதுபோல நடித்த ​இளைஞர்கள், ​முருகன் கண்ணில் மிளகாய் பொடியை​​ தூவி அவர் கையில் வைத்திருந்த 2 லட்ச​ ரூபாயைப் பறித்​தனர்​.​ ​தடுக்கமுயன்ற ​அழகுமணி​யை ​கத்தியைக்​ காட்டி மிரட்டி​விட்டு ​​அங்கிருந்து ​பைக்கில் தப்பினர்​. இச்சம்பவத்தில் மேற்பார்வையாளர் அழகுமணி ​பைக் பெட்டியில் வைத்து ​கொண்டு வந்த ​இரண்டரை லட்ச ரூபாய் கொள்ளையர்களுக்கு தெரியாமல் தப்பியது​ எனக் கூறியுள்ளனர். ​

இதுகுறித்து ​நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகனிடம்​ பேசினோம். டாஸ்மாக் ஊழியர்கள் புகார் அடிப்படையில் நிகழ்விடத்துக்கு சென்றுவிசாரித்தோம். அவர்கள் கூறுவது போல எவ்வித தடமும் அங்கே இல்லை. அவர்கள் பைக்கை பின்தொடர்ந்து இளைஞர்கள் பைக்கில் வந்ததாகக் கூறினர். இதனால் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தோம். ஆனால் அதில் அவர்கள் குறிப்பிடும் நேரத்தில் எந்த பைக்கும் பின்தொடரவில்லை. பைக்கை இடித்து கீழே தள்ளியவர்கள் என்ன கலர் உடை அணிந்திருந்தார்கள். அவர்கள் ஓட்டிவந்த வாகனத்தின் பெயர், கலர் என்ன என்பதைக் கூட புகார் அளித்தவர்கள் கூறவில்லை.

டிஎஸ்பி முருகன்

இதனால் பொய் புகார் அளிக்கிறார்கள் என்ற சந்தேகத்தில், முருகனிடம் விசாரித்தோம். அப்போது அவர் உள்ளாடையில் ​25 ஆயிரம்​ ​ரூபாய் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது​. `இந்தப் பணம் யாருடையது? எதற்காக உள்ளாடையில் மறைத்து வைத்துள்ளீர்கள்?’ எனக் கேட்டால் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். அதேவேளையில், கொள்ளை சம்பவம் நடந்ததாகக் கூறுவோரில் ஒருவரான அழகுமணி தன்னுடையை சரக்கு விற்பனைக்கான பணத்தை அப்போது சென்று வங்கியில் செலுத்திவிட்டு வந்துள்ளார். அவரும் முன்னுக்குபின் முரணான தகவல்களைக் கொடுக்கிறார். இதில் அதிர்ச்சியடைந்த இருவரும் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டாம் எனக் கூறிச் சென்றுவிட்டனர்” என்றார். டாஸ்மாக் ஊழியர் முருகனை தொடர்புகொள்ள முயன்றோம் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.


மேலும் படிக்க திண்டுக்கல்: மிளகாய் பொடி தூவி ரூ.2 லட்சம் கொள்ளை; நாடகமாடினார்களா டாஸ்மாக் ஊழியர்கள்?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top