``எங்களைக் கொலை செய்ய ப்ளான் பண்ணினார்... நாங்க முந்திக்கிட்டோம்” - 2 சிறார்களின் பகீர் வாக்குமூலம்

0

தூத்துக்குடி பிரையண்ட்நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பெயின்டரான சரவணகுமார், தாளமுத்துநகரில் வசித்து வந்த நிலையில், அங்குள்ள சிலருடன் அடிகடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த வீட்டைக் காலி செய்துவிட்டு குடும்பத்துடன் பிரையண்ட்நகரில் வந்து குடியேறியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட சரவணகுமார்

இந்த நிலையில், நேற்றுமுந்தினம் இரவு சுமார் 10 மணியளவில் தனது உறவினர் சிவாவை மதுரைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காக தனது தம்பி முகேஷ்கண்ணனுடன் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். மூவரும் பேருந்து நிலையத்திற்குள் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 3 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், சரவணக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், சரவணக்குமாரின் இரண்டு மணிக்கட்டுகளும் துண்டாகின. தலை, கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் கீழே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

இதனையடுத்து வடபாகம் காவல் நிலைய போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர். ஆய்வாளர் ரபிசுஜின் ஜோஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் 2 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். ``சரவணகுமாரோட நண்பர் ராஜாமணிக்கும், மனோவா ரோஸிங்கிறவருக்கும் மூணு வருஷமா முன் விரோதம் இருந்து வந்துச்சு. இதுல ராஜாமணி, சரவணக்குமாரோட சேர்ந்து மனோவா ரோஸை கொலை செஞ்சுடுவேன்னு சொன்னார்.

கொலை செய்யப்பட்ட சரவணகுமாரின் உடல்

கொலை செய்ய திட்டமும் போட்டு ஒரு வாரமா தேடிக்கிட்டு இருந்தாங்க. இது மனோவா ரோஸுக்கு தெரிஞ்சு போச்சு. அவருக்கு நாங்க நெருக்கமா இருக்குறதுனால எங்களையும் டார்கெட் பண்ணினார். `அவங்க நம்மளைக் கொலை செய்யுறதுக்கு முன்னால நம்மளே அவங்க ரெண்டு பேரையும் கொலை செஞ்சுடுவோம்’னு எங்ககிட்ட சொன்னார் மனோவா ரோஸ். ராஜாமணியோட அப்பா ரெண்டு நாளுக்கு முன்னால இறந்து போயிட்டார்.

அதனால அவர் வீட்டை விட்டு வெளிய வரலை. இந்த நிலையில சரவணக்குமாரை கண்காணிச்சதுல அவர் புதிய பஸ்ஸடாண்ட்ல இருக்குறதா எங்களோட நண்பர் ஒருத்தார் சொன்னார். ராஜாமணியை அப்புறம் பார்த்துகலாம், கையில கிடைச்ச சரவணக்குமாரை முதல்ல கொன்னுடுவோம்னு மனோவாரோஸ் சொன்னதுனால பஸ் ஸ்டாண்ட்ல வச்சு அரிவாளால வெட்டினோம்” என்றனர்.

கொலை நடந்த புதிய பேருந்து நிலையம்

அந்த 2 சிறுவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மனோவா ரோஸ், அவரது நண்பர்களான துரைசாமி, கார்த்திகேயன் ஆகியோரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பேருந்திற்காக காத்திருந்த பயணிகள், அப்பகுதி வழியேச் சென்றவர்கள் உள்ளிட்டோர் இக்கொலைச் சம்பவத்தைப் பார்த்து பதறி ஓடினர். அந்த கும்பலிடம் சரவணக்குமார் தன்னை வெட்ட வேண்டாம் என கைகூப்பி உயிருக்காக கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


மேலும் படிக்க ``எங்களைக் கொலை செய்ய ப்ளான் பண்ணினார்... நாங்க முந்திக்கிட்டோம்” - 2 சிறார்களின் பகீர் வாக்குமூலம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top