ராஜாவின் பார்வையில் - இளையராஜா - 9

0

பூட்டு என்பது ஆதிக்கம்

திறப்பது வழிமுறை

உடைப்பது வன்முறை

கடந்த வாரம் சிங்கப்பூர் சென்றிருந்தேன் . அங்கு நான் கேள்விப்பட்ட ஒரு செய்தி ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது .

அங்கே நீதித்துறையில் அதிகபட்சமாக வழங்கப்படும் தண்டனை போதைப் பொருள் வைத்திருப்பவர்களுக்குத்தான். தூக்கு அல்லது எலெக்ட்ரிக் ஷாக் மரணம் !

Rajavin Parvaiyil - Ilaiyaraaja - 9

இது தெரிந்திருந்தும் ஒரு தாய் , தன் மகன் போதைப் பொருள் வைத்திருந்ததாகச் சொல்லி அவனை போலீஸில் ஒப்படைத்தாள் . அதற்குமுன் அந்தத் தாய் , தன் மகனைத் திருத்த எவ்வளவோ முயற்சி செய்திருக்கிறாள் . கடிந்தும் நயந்தும் எப்படிச் சொல்லியும் மகன் திருந்திய பாடு இல்லை . வேறுவழியின்றி தான் போலீஸில் ஒப்படைத்தாள் .

வழக்கு விசாரணைக்கு வந்தது . நாடே இந்த வழக்கை ஆர்வத்தோடு கவனித்தது .

நீதிபதி கேட்டார் : “ உங்கள் மகனுக்குத் தூக்குத் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்திருந்தும் போலீஸில் ஒப்படைத்தீர்களே , ஏன் ? "தாய் சொன்னாள் : “ போதைப் பொருள் அதை உண்பவனை மட்டும்தான் கெடுக்கும் . அதை விற்றவனோ சுற்றுப்புறத்தையும் சூழ்நிலையையும் சமூகத்தையும் பாழ்படுத்துகிறான் . என் மகனால் அவன் நண்பர்களும் அந்த நண்பர்களால் பள்ளிக் கூடமும் கெடுகிறது . இவனால் நாட்டுக்கு நஷ்டம் என்பதால் , இவன் இருப்பதைவிட இல்லாமல் போவதே நாட்டுக்கு நல்லது என்று போலீஸில் ஒப்படைத்தேன்."

Rajavin Parvaiyil - Ilaiyaraaja - 9

அந்த நீதிபதி வெறும் சட்டத்தை மட்டுமே வைத்துக்கொண்டு தீர்ப்பு சொன்னால் மகனுக்குத் தூக்குத் தண்டனையும் அந்தத் தாய்க்கு கோர்ட்டாரின் பாராட்டும் கிடைத்திருக்கும் .

ஆனால் , சட்டத்துக்கு மேலே வழக்கில் மனிதநேய உணர்வு இழையோட , நாட்டின் பிரதமரே இதில் தலையிட்டு , ' இதுபோல ஒரு தாய் , தன் மகன் போதைப் பொருளால் கெட்டுப்போகிறான் என்று போலீஸில் ஒப்படைத்தால் , அவனுக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து ரத்து கிடைக்கும் ' என்று சட்டத்தையே திருத்தி அமைத்து விட்டார்கள் .

தீர்ப்பு சட்டதிருத்தமாக அமைந்த அன்று தன் மகனை அந்தத் தாய் கட்டிப்பிடித்து அழ . . . .

மகனோ இனிமேல் ஜென்மத்துக்கும் போதைப் பொருளை நினைத்துக்கூடப் பார்க்கமாட்டேன் ' என்று சத்தியம் செய்த காட்சியைக் கண்டவர்கள் கலங்கினார்கள் . ஏன் . . . கேள்விப்பட்ட நானும்தான் கலங்கினேன் . ஒழுங்காக வழிநடக்கும் மனமே இன்பத்தின் திறவுகோல் !

ஒரு நாட்டின் நலத்துக்கும் முன்னேற்றத்துக்கும் அதன் கலை , கலாசாரம் , சட்டம் - ஒழுங்குதான் திறவுகோல் . இருக்கும் நல்லவற்றை ஏன் பூட்டி வைக்க வேண்டும்! இல்லை... இல்லை.... மூடிக்கிடக்கும் நல்லவற்றைத் திறந்து வைக்க ஒரு மனித நேயத் திறவு கோல் வேண்டும் .

- பொன்.சந்திரமோகன்/ இளையராஜா

(13.06.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)


மேலும் படிக்க ராஜாவின் பார்வையில் - இளையராஜா - 9
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top