`பிரபலமானவரை உதவியாளரா வச்சுட்டு நான் பட்ட பாடு!' - கங்கை அமரன் #AppExclusive

0

ரம்பத்தில் கிடார் வாசித்துக் கொண்டிருந்தவர், படிப்படியாக முன்னேறி, பாடலாசிரியராகி, இசையமைப்பாளராகி, இப்போது டைரக்டர் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார் கங்கை அமரன்.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது சொன்னார்; 

"பாரதிராஜாவோட `பதினாறு வயதினிலே' படத்திலேயே அஸிஸ்டென்ட் டைரக்டராகணும்னு எனக்கு ஆசை... ஆனா அப்போ கிடாரிஸ்ட்டான எனக்கு ஒரு ரிக்கார்டிங்குக்குப் போனா இருநூறு ரூபாய் கிடைக்கும். இதை இழந்துட்டு உதவி டைரக்டரா போக முடியலே... காரணம், அப்போதான் எனக்கு கல்யாணமாகி இருந்தது. குடும்பத்தைக் காப்பாத்தணும்கிற கடமை.

Gangai Amaran

'அலைகள் ஓய்வதில்லை’ படம் வெற்றியடைஞ்ச பிறகு என் அண்ணன் பாஸ்கர்கிட்ட 'கோழி கூவுது' கதையைச் சொன்னேன். 'ஏன்... நீயே இதை டைரக்ட் பண்ணேன்’னு பாஸ்கர் சொன்னபோது எனக்கு ரொம்பவும் சந்தோஷமா இருந்தது. - 'கோழி கூவுது' படத்தில ஒரு நண்பரை என்னோட உதவியாளரா வச்சிருந்தேன். இவர் ஏற்கெனவே ஒரு படத்தை டைரக்ட் செய்தவர். இதனால என்னாச்சுன்னா படத்தை உண்மையிலேயே அந்த நண்பர்தான் டைரக்ட் செய்யறதாகவும். நான் சும்மா 'டம்மி'ன்னும் வதந்திகள் பரவ ஆரம்பிச்சது

நான் எதையும் சொந்தமா செய்யனும்னு ஆசைப்படறவன். ஒரு சமயம் ஒரு பிரபல இசையமைப்பாளர் பாடல் எழுதறத்துக்கு என்னைக் கூப்பிட்டார். நானும் போய் ட்யூனுக்குத் தகுந்தாப்பலே எழுதிக் கொடுத்தேன். அவரும் ஓகே சொல்லிட்டார்... ஆனா படத்தோட தயாரிப்பாளர் வந்து, ரொம்பவும் மட்டமான அர்த்தம் தர்ற பல்லவி ஒண்ணு சொல்லி, என் பல்லவியை மாத்தச் சொன்னார்... எனக்கு இது பிடிக்கலே. எழுந்து வந்துட்டேன்.

பாலாஜி சார் தன்னோட 'வாழ்வே மாயம்' படத்துக்கு இசையமைப்பாளரா என்னைப் போட்டு, 'பிரேமாபிஷேகம்' படத்து பாட்டெல்லாம் ஹிட்... அதே ட்யூனை நீ இந்தப் படத்தில போடணும்னு சொன்னார். நான் அவர்கிட்ட ரொம்பவும் பணிவா, நீங்க சொல்றபடியே செய்திடறேன்... ஆனா அதுக்கு முன்னாடி நான் ஏழெட்டு ட்யூன் போட்டுக் காட்டறேன்.

Gangai Amaran

பிடிச்சதுன்னா பாருங்கன்னு சொல்லி, ட்யூன் போட்டுக் காட்டினேன். ஓகே சொல்லிட்டார் பாலாஜி. அதிலே வர்ற ஒரு பாடலோட பல்லவி ட்யூனைத் தவிர மற்றதெல்லாம் நான் சொந்தமா போட்டதுதான்... இதை எதுக்காகச் சொல்ல வந்தேன்னா ஒரு பாடல் விஷயத்திலேயே சொந்தமா செய்ய விரும்பற நான் டைரக்டர் ஆன விஷயத்திலேயும் அப்படித்தான் இருப்பேன்கிறதைச் சொல்றதுக்குத்தான். அதிலிருந்து ஒரு பாடம். இனிமே பிரபலமான யாரையும் உதவியாளரா வச்சுக்கக் கூடாது."

- இரா.

('அந்தப் படம் எனக்கொரு பாடம்' என்ற தலைப்பில் 19.09.1982 தேதியில் ஆனந்த விகடன் இதழில் இருந்து...)

மேலும் படிக்க `பிரபலமானவரை உதவியாளரா வச்சுட்டு நான் பட்ட பாடு!' - கங்கை அமரன் #AppExclusive
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top