இலவசத் திட்டங்களுக்கு என்னதான் தீர்வு?

0

இலவசத் திட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் மத்திய அரசின் சார்பில் ஆஜராகி பேசிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இலவசத் திட்டங்களை முறைப்படுத்தவில்லை எனில், நாடு பொருளாதாரச் சீரழிவை சந்திக்கும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த நிபுணர் குழு ஒன்றை ஏற்படுத்தலாம் என்று யோசனை சொல்லி இருக்கிறார்.

அரசாங்கங்கள் தங்கள் நிதிநிலையைக் கணக்கில் கொள்ளாமல், சகட்டுமேனிக்கு இலவசத் திட்டங்களை அறிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; இலவசத் திட்டங்கள் மக்களிடம் உழைக்கும் எண்ணத்தை மழுங்கடித்து, அவர்களை சோம்பேறிகள் ஆக்கிவிடுகின்றன என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால், இலவசத் திட்டங்களை அறிவிப்பதை எந்த அரசியல் கட்சி முதலில் நிறுத்தப்போகிறது என்பதுதான் முக்கியமான கேள்வி.

இலவசத் திட்டங்கள் என்றாலே அது மாநிலக் கட்சிகள் கண்டுபிடித்த எலெக்‌ஷன் ஏமாற்று என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் தேசியக் கட்சிகளின் செயல்பாடு, மாநிலக் கட்சிகளுக்குக் கொஞ்சம்கூட குறைந்தாக இல்லை. இந்த ஆண்டு நடந்த உ.பி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வும், காங்கிரஸும் போட்டி போட்டுக்கொண்டு இலவசத் திட்டங்களை அறிவித்தது ஊருக்கே தெரிந்த உண்மை. அந்த மாநிலத்தில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் நடக்கும் தேர்தலில் இந்த மாதிரியான அறிவிப்புகளை தேசியக் கட்சிகள் வெளியிடத்தான் செய்கின்றன.

ஆக இந்த விஷயத்தில் மாநிலக் கட்சிகள், தேசியக் கட்சிகள் என்று பிரித்துப் பார்க்காமல், அரசியல் கட்சிகள் இந்த அளவுக்குதான் இலவசத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று கறாரான விதிமுறைகளைத் தேர்தல் கமிஷன் உருவாக்க வேண்டும். உதாரணமாக, அனைவருக்கும் 10 கிலோ அரிசி இலவசம் என்று அறிவிக்காமல், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே 10 கிலோ அரிசி இலவசம் என்று தெளிவாக அறிவிக்க புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து, அதை அனைத்து அரசியல் கட்சிகளும் அவசியம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தலாம்.

இலவசங்களைப் பெறத் தகுதியானவர்கள் என்பதை மத்திய, மாநில அரசுகள் சரியாகக் கண்டறிய வேண்டும். இன்றைக்குப் பல லட்சம் சம்பாதிப்பவர்களும் ரேஷன் கடையில் அரிசி வாங்குவது உட்பட அனைத்து சலுகைகளையும் பெறு கிறார்கள். இப்படி நடந்தால்தான் நம்மால் கொள்ளை அடிக்க முடியும் என்பது தெரிந்தே அரசியல்வாதிகள் அதை மாற்றாமல் இருக்கிறார்கள். ஆக, அனைத்து அரசியல்வாதிகளும் மனம் திருந்தினால் தவிர, இந்தப் பிரச்னைக்குத் தீர்வில்லை.

இப்படிப்பட்ட திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளை ஆதரிக்கக் கூடாது என்கிற சிந்தனை மக்களிடமும் உருவாக வேண்டும். இந்த விஷயத்தில் மக்கள் உறுதியான முடிவெடுக்கவில்லை எனில், காலகாலத்துக்கும் நம்மைக் கடன்காரர்களாகவே அரசியல் கட்சிகள் வைத்திருக்கும்!

- ஆசிரியர்


மேலும் படிக்க இலவசத் திட்டங்களுக்கு என்னதான் தீர்வு?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top