`கொடைக்கானல் - மூணாறு எஸ்கேப் சாலை என்ன ஆனது?’ - போராட தயாராகும் தமிழ்நாட்டு விவசாயிகள்

0

மலைகளின் இளவரசியான ​கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் இருந்து 6 கிலோ மீட்டர் ​தூரத்தில் மோயர் வியூ பாய்ன்ட் என்ற பகுதி​ உள்ளது. இப்பகுதிக்கு பாதை ​உருவாக்கியதாகக் கூறி​ ஆங்கிலேயர் தாமஸ் மோயர் என்பவ​ருக்கு ​​​ நினை​வு தூண் அமைத்து அவரின் பெயரையே இப்பகுதிக்கு சூட்டிவிட்டனர்.

கொடைக்கானல்

இதேபோல கொடைக்கானலை ஆங்கிலேயேர்கள் தான் கண்டறிந்து அதிகமாக குடியேறினர், பல்வேறு பகுதிகளுக்கு பாதை உருவாக்கினர் எனக் கூறப்படுகிறது. ஆனால் ஆதிகுடியான தமிழர்கள் ஏற்கெனவே கொடைக்கானலுக்கு பாதை அமைத்து அங்கு வாழ்ந்தது மட்டுமில்லாது கொடைக்கானலில் இருந்து மூணாறு செல்வதற்கான பாதையும் அமைத்துள்ளனர்.

இந்தப் பாதை மூடப்பட்டதால் பெரும்பாதிப்பை சந்தித்துவருகிறார்கள் விவசாயிகள். தமிழக - கேரள எல்லையில் தமிழர்களுக்காக போராடும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம்.

``கடந்த 1944-ல், ​இரண்டாம் உலகப் போ​ர் காலகட்டத்தில் கொடைக்கானலில் ஆங்கிலேயர்கள் அதிக எண்ணிக்கையில் ​வசித்து வந்துள்ளனர். ​உலகப்​ போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில், சென்னை மீது ஜப்பான் அணுகுண்டு வீசப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து, அன்றைக்கு சென்னையில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள், உடனடியாக தங்கள் நாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு ஒரு பாதையை தேர்ந்தெடுத்தார்கள்.

அன்வர் பாலசிங்கம்

​அந்தப் பாதை கொடைக்கானல் வழியாக பூம்பாறை, மன்னவனூர், பூண்டி வழியாக கிளாவரை சென்று, அங்கிருந்து 11 கிலோமீட்டர் குதிரையில் பயணித்து, டாப் ஸ்டேஷனை அடையவேண்டும்.​ ​​அங்கிருந்து எல்லப்பட்டி, மாட்டுப்பட்டி, குண்டல, கிராம்ஸ்லேண்ட் வழியாக மூணாறை அடைந்து, அங்கிருந்து அடிமாலி கோதமங்கலம் வழியாக கொச்சிக்கு சென்று, கப்பல் மார்க்கமாக இங்கிலாந்துக்கு​ச் செல்வது அவர்களின் திட்டமாக இருந்தது.

இறுதியில் அந்த வழியாக கொச்சிக்கு சென்று இங்கிலாந்து தப்பி ஓடினார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள் பலர். அவர்கள் சென்ற அந்த பாதைக்கு பெயர், தப்பி ஓடிய பாதை என்பதால் எஸ்கேப் ரோடு என்று ஆனது.

​இந்தப் பாதை உருவாவதற்கு முன்னாலேயே, வட்ட வடை, கோவிலூர், கொட்டக்கம்பூர் உள்ளிட்ட 28 மலை கிராமங்களில் வாழ்ந்த தமிழ் விவசாயிகள், தங்கள் விளைபொருள்களை குதிரை மற்றும் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு, கொடைக்கானலுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்​. கரடுமுரடாக இருந்த அந்தப் பாதையைப் பயன்படுத்தி தான் ​ஆங்கிலேயர்கள் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடியிருக்கிறார்கள்.

மூணாறு

​நாடு விடுதலை அடைந்த பிறகும் கூட அந்தப் பாதை பயன்பாட்டிலேயே இருந்து வந்திருக்கிறது. ஆனால் 1956 மொழிவழிப் பிரிவினை துரதிஷ்டவசமாக வட்டவடை, கோவிலூரை கேரளாவோடு இணைத்தது.​ ​இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட மலையாளிகள், உடனடியாக களத்தில் இறங்கி எஸ்கேப் ரோட்டை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள். தேவிகுளம் தாலுகாவில் ஏற்கனவே தமிழர்கள் பெரும்பான்மையாக இருப்பதை மனதில் கொண்ட மலையாளிகள், எந்த வகையிலும் கொடைக்கானல் பகுதியில் இருந்து தமிழர்கள் மேற்கு நோக்கி நகர்வதை அனுமதிக்கவில்லை.

​தேவிகுளம், உடுமஞ்சோலை, பீர்மேடு தாலுகாவில் உள்ள தமிழர்களை, தேயிலைத் தோட்டங்களில் செயற்கையாக நடத்தப்பட்ட கதவடைப்பு போரட்டங்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றிய மலையாள அரசு, கடந்த 2003 ஆம் ஆண்டு எஸ்கேப் ரோட்டை மறித்து,​ ​அதை பாம்பாடும் சோலை தேசிய பூங்காவாக அறிவித்தது.

கொடைக்கானல்

முன்பு இருதரப்பு பயணத்திற்கு ஓரளவு முட்டுக்கட்டை போட்ட கேரள மாநில அரசு,​ ​இப்போது டாப் ஸ்டேஷன் தாண்டியதும் கிளாவரை வரை சென்று தமிழகத்தை இணைக்கும் எஸ்கேப் ரோட்டில் சங்கிலியைப் போட்டு இழுத்துப் பூட்டியது.​ ​ஜிப் களில் ஓரளவு பயணித்து வந்த இரண்டு பக்கமும் உள்ள தமிழர்கள், இப்போது கேரள மாநில வனத்துறையால் கடும் அவதியை​ச்​ சந்தித்து வருகிறார்கள்.

​கேரள அரசு​ ​​வெறும் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த பண சாலையை இழுத்துப்பூட்டியதன் மூலம், மிகப்பெரிய பொருளாதார தாக்குதலை வட்ட வடை கோவிலூர் உள்ளிட்ட 28 மலை கிராமங்களில் வாழும் தமிழர்கள் மீது திணித்திருக்கிறது​.​ எஸ்கேப் ரோட்டை இழுத்து பூட்டியது மனித உரிமைகளை மீறும் செயல்”​ என்றார்.

கேரள தலைமைச்செயலகம்

​இறுதியாக, ``​இரண்டு மாநில அரசுகளும் இதற்கு ஒரு முன் முயற்சியை எடுக்க வேண்டும். இல்லையேல் ​​வட்டவடை, கோவிலூர் உள்ளிட்ட 28 மலை கிராம மக்களையும், கிளாவரை, மன்னவனூர்,​ ​பூண்டி உள்ளிட்ட 16 கிராம மக்களையும் ஒன்றாக திரட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்​” என்றார். ​


மேலும் படிக்க `கொடைக்கானல் - மூணாறு எஸ்கேப் சாலை என்ன ஆனது?’ - போராட தயாராகும் தமிழ்நாட்டு விவசாயிகள்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top