கொள்ளைக்காரர்கள் லாபம் சம்பாதிக்கவா விவசாயக் கடன்?

0

‘ரூ.3 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களுக்கு, 1.5% வட்டி மானியம் வழங்கப்படும்’ என அறிவித்திருக்கிறது. இதற்காக ரூ.34,856 கோடியை ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்திருக்கிறது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கணினிமயமாக்கப்பட்ட தொடக்க வேளாண் சங்கங்கள் ஆகியவற்றில் பெறப்படும் விவசாயக் கடன்களுக்கு மட்டுமே இந்த வட்டி மானியம்.

இது, உள்ளபடியே வரவேற்கத்தக்க ஒன்றுதான். விவசாய விளைபொருள்களுக் கான விலை நிலையற்றதாக இருக்கும் சூழலில், விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு உத்தரவாதம் இல்லாத நிலையே நீடிக்கிறது. இந்நிலையில், வாங்கிய கடனுக்கும் வட்டி கட்ட முடியாத கஷ்டத்தில்தான் விவசாயிகள் இருக்கிறார்கள். அந்தக் கஷ்டத்தைக் கொஞ்சம் குறைக்க இந்த வட்டி மானியம் நிச்சயம் பயன்படும்.

இது ஒருபுறமிருக்க, இந்த விவசாயக் கடன், மானியம் எல்லாம் தகுதியான விவசாயிகளுக்குதான் சென்று சேர்கிறதா என்பது, நீண்ட காலமாக கேள்வி யாகவே நீடிக்கிறது. காங்கிரஸ் காலத்திலும் இப்படி கடன் மானியம் இருந்தது. அந்தக் காலம்தொட்டே ‘விவசாயி’ என்று சொல்லிக்கொண்டு கடன் வாங்கும் போலி விவசாயிகள் பலரும், அந்தப் பணத்தை வட்டிக்கு விட்டு 30% அளவுக்கு வருமானம் பார்ப்பதைத்தான் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஒரு வீட்டுக்கு மூன்று, நான்கு பேர் வரை இப்படி ‘விவசாயி’ வேடமிட்டு, வட்டி பிசினஸ் நடத்துவதை ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர்.

விவசாயம் என்பது மக்கள் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான தொழில். அதற்கு மாற்று கிடையாது என்பதற்காகத்தான் முன்னுரிமை அடிப்படையில் கடன், மானியங்கள் தரப்படுகின்றன. ஆனால், தகுதி வாய்ந்த விவசாயிகளைவிட, கட்சிக்காரர்கள், கமிஷன் பேர்வழிகள், வட்டிக்கடை முதலாளிகள் என்றொரு பெரும்கூட்டம்தான், இதனால் பெரும்பாலும் லாபம் அடைந்துகொண்டிருக்கிறது!

ஆக, மானியங்களைக் கொடுப்பதற்கு முன், உண்மையான விவசாயிகளைக் கண்டறிவது முக்கியம். மானியத்துடன்கூடிய விவசாயக் கடன், தகுதி வாய்ந்த விவசாயிகளுக்குத்தான் சென்று சேர்கிறதா, அவர்கள் விவசாயத் தேவைக்குத்தான் அதைப் பயன்படுத்துகிறார்களா, கடந்த காலங்களில் வாங்கிய இதுபோன்ற கடன்கள் மூலம் அவர்களுடைய விவசாயத் தொழில் எந்த அளவு வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்துதான், கடன் மற்றும் மானியத்தைத் தர வேண்டும். ‘இதெல்லாம் நடைமுறையில் சாத்தியப்படுமா?’ என்று கேட்டால், வங்கிக் கணக்கு, ஆதார் என்று அனைத்தையும் இணைத்து வைத்திருக்கும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நிச்சயம் சாத்தியம்தான்!

‘டிஜிட்டல் இந்தியா’ என்று விளம்பரம் செய்தால் மட்டும் போதாது, அதை நிஜத்திலும் 100% சாத்தியப்படுத்திக் காட்டியாக வேண்டும். உண்மையான விவசாயிகளைக் கண்டறியும் விஷயத்திலும் அது தொடர வேண்டும்!

- ஆசிரியர்


மேலும் படிக்க கொள்ளைக்காரர்கள் லாபம் சம்பாதிக்கவா விவசாயக் கடன்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top