``சாயிபாபாவை, சாமியா நினைச்சு கும்பிடணுமான்னு நினைச்சேன்" - ஆன்மிக அனுபவம் பகிரும் திவ்யா கிருஷ்ணன்!

0

``எங்க வீட்ல உள்ள பெரியவங்க கூட அவங்களுடைய இயலாமையைக் கடவுள்கிட்ட தான் காட்டுவாங்க. ஆனா, நான் என்னைக்குமே கடவுள் மீது பழி சொல்ல மாட்டேன். நான் போகிற வழியில் என் காலில் முள் குத்தினால்கூட இந்த வழியில் ஏதோ பிரச்னை எனக்கு வரப்போகுது... அதைக் கடவுள் மறைமுகமாகச் சொல்றார். எச்சரிக்கையாக இந்தப் பாதையைக் கடக்கணும்னு தான் நான் நினைப்பேன். அப்படித்தான் அவர் இன்னைக்கு வரைக்கும் எனக்கு வழிநடத்திட்டு இருக்கிறார்!" என்றவாறு பேசத் தொடங்கினார் திவ்யா கிருஷ்ணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'வேலைக்காரன்' தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமானவர். விஐபி பூஜையறை பகுதிக்காக அவரை சந்தித்து பேசினோம்.

திவ்யா

"என்னோட குலதெய்வம் பச்சையம்மன். இஷ்ட தெய்வம் என்றால் சிவன் பிடிக்கும். ஆனா, கடந்த இரண்டு வருஷமா சாயிபாபாவின் தீவிர பக்தை ஆகிட்டேன். கருமாரி அம்மன் கோயிலுக்கு அடிக்கடி போயிட்டு வருவேன். எனக்குக் கோயிலில் கொடுக்கக்கூடிய வெண் பொங்கல் பிரசாதம் ரொம்பப் பிடிக்கும்.

சிறு வயதிலிருந்தே கோயில்களுக்குப் போறது, சாமிப் பாடல்கள் பாடுறதுன்னு இருப்பேன். அது இப்ப வரைக்கும் தொடர்ந்துட்டு இருக்கு. சிலர், கோயிலுக்குப்போய் சாமியை வழிபடுவாங்க.. சிலர், வீட்டு பூஜையறையில் வழிபடுவாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் கடவுள் தூணிலும் இருப்பார்... துரும்பிலும் இருப்பார். தினமும் நைட்டு 12 மணிக்கு என் படுக்கையில் உட்கார்ந்து சாமி கும்பிடாமல் எனக்கு தூக்கமே வராது. என் பூஜையறையில் திருக்குறள் புத்தகத்தை வைத்திருக்கிறேன். அதைத்தான் நான் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறேன்" என்றவரிடம் உங்கள் வாழ்வில் நடந்த அற்புதம் குறித்துப் பகிர்ந்து கொள்ளுங்கள் எனக் கேட்டோம்.

திவ்யா

"என் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை நான் அற்புதமாகத்தான் பார்க்கிறேன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது தஞ்சைப் பெரிய கோயிலுக்குப் போயிருந்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அங்கே நேரடியாக சிவனைப் பார்த்தேன். அவருடைய மொத்த உருவத்தையும் பார்த்துட்டு ஒரு வாரம் காய்ச்சலில் இருந்தேன். அதை நான் என் வாழ்வில் நிகழ்ந்த இணையற்ற அற்புதமாகத்தான் பார்க்கிறேன். மனுஷங்க வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. இன்றைக்கு நாம் உயிரோட இருக்கிறோம் என்பதைக்கூட கடவுள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அற்புதமாகத்தான் பார்க்கிறேன்" என்றவரிடம் சாயிபாபா மீது ஈடுபாடு வந்தது எப்படி என்பது குறித்துக் கேட்டோம்.

"ஆரம்பத்தில் சாயிபாபா எனக்குப் பிடிக்கவே இல்லை. ஷூட்டிங் போகும்போது அவருடைய கோயிலைத் தாண்டிப்போகும் போதெல்லாம் இவரையெல்லாம் சாமியா நினைச்சுக் கை எடுத்துக் கும்பிடணுமான்னுலாம் நினைச்சிருக்கேன். நான் ஏன் அப்படி நினைச்சேன்னு கூட எனக்குத் தெரியல. அப்படி நினைச்ச எனக்குள்ள என்ன மாற்றம் நிகழ்ந்ததுன்னும் தெரியல. என் வாழ்க்கையில் சாயி, சாயினு சொல்ற அளவுக்கு என்னை மாத்திட்டார். எப்படி அவரை வழிபட ஆரம்பிச்சேன்... எப்படி அவர் பெயரை சொல்லிட்டே இருக்கேன்... எதுவுமே எனக்கு தெரியல. இப்படி அவர் என்னை மாத்தியிருக்கார்னு நினைக்கும்போதே ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. இந்த அளவுக்கு நான் உறுதியான மன பலத்துடன் இருக்கேன்னா அதுக்கு நிச்சயம் சாயிதான் காரணம். சாயி அருளால் என் வாழ்க்கையில் நல்லது மட்டும் தான் இதுவரை நடந்திருக்கு.. இனியும் நடக்கும்!' என்றார்.

திவ்யா

அவருடைய பூஜை அறை குறித்துப் பல விஷயங்களை திவ்யா நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!


மேலும் படிக்க ``சாயிபாபாவை, சாமியா நினைச்சு கும்பிடணுமான்னு நினைச்சேன்" - ஆன்மிக அனுபவம் பகிரும் திவ்யா கிருஷ்ணன்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top