பெரம்பலூர்: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - அலுவலக கண்காணிப்பாளருக்கு எதிராக அதிரடி காட்டிய டிஐஜி!

0

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிகரன். இவர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் கடந்த 2018-ம் முதல் அமைச்சு பணியாளர் பிரிவு கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். அதனைத் தொடர்ந்து அவர் போலீஸாருக்கு ஊதியம் வழங்கும் பிரிவில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

பெரம்பலூர்

இந்தநிலையில், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயுதப்படையைச் சேர்ந்த திருமணமாகாத பெண் காவலர் ஒருவர், நிலுவையில் உள்ள ஊதிய பிரச்னைகளை பெற்றுத்தர வேண்டி. ஹரிகரனை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்

அதில், இருந்து அந்த பெண் போலீஸாருக்கு ஹரிகரன் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் எல்லை மீறிச் சென்றதும், அதனை உயர் அதிகாரிகளிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறார் அந்த பெண் போலீஸ். அதனைத்தெரிந்துக்கொண்ட ஹரிகரன், `என்னைப் பற்றி உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாயா?’ என்று கடுமையான வார்த்தைகளால் மிரட்டி வந்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் போலீஸ் பெரம்பலூர் எஸ்.பி மணியிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

அப்போதைய திருச்சி சரக டி.ஐ.ஜி. ராதிகா விசாரணை நடத்தி, ஹரிகரனை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆனால், அவர் புதுக்கோட்டைச் செல்ல மறுத்ததோடு மீண்டும் அதே இடத்திற்கு வருவேன் என்றும், அந்த பெண் போலீஸாரை விடமாட்டேன் என்று சக போலீஸாரிடம் எச்சரிக்கும் விதமாக பேசியிருக்கிறார்.

பெண் போலீஸார்

இதனால் ஹரிகரன் துறை ரீதியிலான நடவடிக்கையாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாலியல் புகார் குறித்து விசாக குழு நடத்திய விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், திருச்சி சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர், ஹரிகரனுக்கு கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

போலீஸாருக்கு ஊதியம் வழங்கும் பிரிவில் கண்காணிப்பாளர் ஹரிகரன்

பெரம்பலூர் காவல்துறை வரலாற்றில் அலுவலக கண்காணிப்பாளர் நிலையில் பதவியிலுள்ள ஒருவருக்கு பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அதற்காகக் கட்டாய ஓய்வு தண்டனை வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

யார் இந்த ஹரிகரன் என்று பெரம்பலூர் போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். “ஹரிகரன் பெண்கள் விவகாரத்தில் வீக். இவர், ஏற்கனவே பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வேலைப்பார்த்து வந்த பெண் உதவியாளருக்கு பாலியல் ரீதியிலான டார்ச்சர் கொடுத்திருக்கிறார்.

திருச்சி சரக டி.ஐ.ஜி

அந்த புகாரை விசாரித்த விசாகா குழு இரண்டு ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வினை ஒத்திவைத்தது. மீண்டும் மற்றொரு பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்தாக சிக்கிய வழக்கில் தான் டி.ஐ.ஜி சரவண சுந்தர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களிடமும்,பெண் போலீஸாரிடம் தவறாக நடந்துகொண்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்கிற நிலை வந்தால் மட்டுமே இது போன்ற தவறு குறையும்” என்கின்றனர் ஆவேசமாக .


மேலும் படிக்க பெரம்பலூர்: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - அலுவலக கண்காணிப்பாளருக்கு எதிராக அதிரடி காட்டிய டிஐஜி!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top