வேலைவாய்ப்பைப் பெருக்க மிகச் சிறந்த வழி..!

0

இந்தியா, இளைஞர்களின் தேசமாக இருக்கிறது. இன்றைக்கு நம் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 25 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது பாசிட்டிவ்வான விஷயம். ஆனால், இத்தனை இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது எப்படி என்பதுதான் நம்முன் இருக்கும் மிகப் பெரிய சவால்.

இதற்கு அருமையான வழி ஒன்றைச் சொல்லி இருக்கிறது பெங்களூருவில் உள்ள ‘டீம்லீஸ்’ (TeamLease) நிறுவனம். மனிதவளத் துறை சார்ந்த இந்த நிறுவனம், கல்லூரியில் படிக்கும்போதே மாணவர்களைத் தொழில் நிறுவனங்களில் பயிற்சி மாணவர்களாக (apprentices) சேர்த்து, தொழில் பயிற்சியை அளிப்பதன் மூலம் திறமையான பணியாளர்களை உருவாக்க முடியும்; வேலைவாய்ப்பையும் கணிசமாக உயர்த்த முடியும் என்கிற யோசனையை முன்வைத்திருக்கிறது.

‘‘கல்லூரி மாணவர்களுக்கு வேலைப் பயிற்சியைத் தர தொழில் நிறுவனங்கள் அக்கறை காட்டுவதே இல்லை. 339 அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் 150 நிறுவனங்களே மாணவர்களுக்கு வேலைப் பயிற்சியை அளிக்க அனுமதிக்கின்றன. அப்ரன்டிஸ் சட்டம் 1961-ன்படி, முப்பதுக்கும் அதிகமான ஊழியர்கள் உள்ள ஓர் அலுவலகத்தில் 2.5% பேர் பயிற்சி மாணவர்களாக இருக்கலாம். அந்த வகையில், அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே ஒவ்வோர்ஆண்டும் 1.25 லட்சம் பேருக்கு வேலைக்கான பயிற்சியைத் தர முடியும். ஆனால், வெறும் 41,250 பேருக்கு மட்டுமே வேலைப் பயிற்சி தரப்படுகிறது. அது மட்டுமல்ல, நம் நாட்டில் 26 லட்சம் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் இருக்கின்றன. ஒரு நிறுவனத்துக்கு ஒரு மாணவன் என்கிற கணக்கில் மாணவர்களுக்கு வேலைப் பயிற்சி அளித்தாலே ஆண்டுதோறும் 26 லட்சம் மாணவர்களுக்கு வேலைப் பயிற்சி அளிக்க முடியும்’’ என விரிவான வாதங்களை முன்வைத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது ‘டீம்லீஸ்’ நிறுவனம்.

ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ஒரு கோடி வேலைவாய்ப்பையாவது உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கும் நாம், அந்த இலக்கை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறோம். மாணவர்களுக்கு வேலைப் பயிற்சியை அளிப்பதன் மூலமே இந்தப் பிரச்னையை இனி நம்மால் தீர்க்க முடியும். பொருளாதாரத்தில் முன்னேறிய பல நாடுகள் தங்கள் நாட்டு இளைஞர்களுக்கு இப்படி வேலைப் பயிற்சி அளிப்பதன் மூலமே திறமையான பணியாளர்களை உருவாக்கி, பொருளாதார முன்னேற்றம் கண்டு வருகின்றன.

நம் நாட்டில் மனிதவளம் இல்லை என்பதல்ல பிரச்னை. அபரிமிதமாக இருக்கும் மனிதவளத்தை ஒழுங்குபடுத்தி, அதை நாட்டின் முன்னேற்றத்துக்கும், தனிமனித வளர்ச்சிக்கும் பயன்படுத்தத் தேவையான வழிகளைக் கண்டறிந்து, நடைமுறைப்படுத்தாமல் இருப்பதுதான் பிரச்னை. ‘டீம்லீஸ்’ நிறுவனம் தந்துள்ள ஆலோசனையை நாம் சரியாகச் செய்யும்பட்சத்தில், தனிமனித வருமான வளர்ச்சியில் 142-வது இடத்தில் இருக்கும் நம் நாடு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 இடங்களுக்குள் நிச்சயம் வரும் என்று எதிர்பார்க்கலாம்!

- ஆசிரியர்


மேலும் படிக்க வேலைவாய்ப்பைப் பெருக்க மிகச் சிறந்த வழி..!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top