``ஜெ.தீபாவை அன்று போல் இன்றும் நேசிக்கிறேன்;விவாகரத்து கோரவில்லை ”- மாதவன் விளக்கம்

0

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாக ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டிக்கு, அவரது கணவர் மாதவன் நம்மை தொடர்புகொண்டு விளக்கம் அளித்துள்ளார்.

ஜெ. தீபா குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து தன் கணவர் மாதவன் தன்னை பிரிந்து விடுவதாகக்கூறி துன்புறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டி ஆனந்த விகடனுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில், தீபாவின் குற்றச்சாட்டு குறித்து விளக்கமறிய அவரின் கணவர் மாதவனை பலமுறை தொடர்புகொண்டபோதும் . அவர் போனை எடுக்கவில்லை.

மாதவன்

இந்த நிலையில்,"என் கணவர் டைவர்ஸ் கேட்டு டார்ச்சர் செய்கிறார்; உதவறதுக்கு யாருமில்ல" - வேதனை பகிரும் ஜெ.தீபா என்று தலைப்பிட்டு ஆனந்த விகடன் டிஜிட்டலில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதனைத்தொடர்ந்து நம்மை தொடர்புகொண்டு பேசிய ஜெ.தீபாவின் கணவர் மாதவன், ”எனது மனைவி தீபா என்னைப் பற்றி அளித்த செய்தியினை மறுக்கிறேன். தீபாவின் உடல்நிலை குறித்து எனக்கு முழு அக்கறை உள்ளது. நான்தான் அவரை இன்றுவரை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று முழுமையாக பார்த்துக்கொள்கிறேன்.

போயஸ் கார்டன் இல்லத்தில் மாதவன் - தீபா

அவர், தற்பொழுது மருத்துவ சிகிச்சையில் உள்ளார். மருந்தின் தாக்கம் அவரிடத்தில் உள்ளது. அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. சராசரியாக எல்லா வீடுகளிலும் நடக்கும் குடும்பத் தகராறுதான். அவர், ஏதோ கோபத்தில் வாட்ஸ்அப்பில் ஸ்டே்டஸ் போட்டுள்ளார்.

அவரை அன்று போல் இன்றும் நேசிக்கிறேன். அவர்மீது எள்ளளவும் மாறாத அன்பும் பிரியமும் கொண்டிருக்கிறேன். அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் துளியும் இல்லை. இதுவும் கடந்துப் போகும்” என்று விளக்கமளித்தார்.

கூடிவாழ்ந்தால் கோடி நன்மை. இருவரும் கூடிவாழ்வதே அவர்களது நலம் விரும்பிகளின் விருப்பம். நமது விருப்பமும் அதுவே!


மேலும் படிக்க ``ஜெ.தீபாவை அன்று போல் இன்றும் நேசிக்கிறேன்;விவாகரத்து கோரவில்லை ”- மாதவன் விளக்கம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top