ஆயுதம், ரத்தம், அகிம்சை... இந்திய சினிமாவில் சுதந்திர போராட்ட திரைப்படங்கள்! #VisualStory

0
சினிமா

சுதந்திரத்தின் போது மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை, தலைவர்களின் தியாகங்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியவை திரைப்படங்கள். சுதந்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களின் வரிசை இதோ...

கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன்(1959): ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து வரி செலுத்த மறுத்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறே இப்படம். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் சிவாஜி நடித்திருப்பார்.

கப்பலோட்டிய தமிழன் (1961): ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தை நிறுவி இயக்கியதால், கைது செய்யப்பட்டு கடுமையான சிறை தண்டனைகள் அனுபவித்த செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரனாரின் வரலாறே இப்படம்.

காந்தி (1982): மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் சுதந்திர போராட்ட வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. ரிச்சர்ட் ஆட்டன்பரோவால் இயக்கப்பட்ட இப்படம் 8 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது.

இந்தியன்

இந்தியன் (1996): ஊழலை ஒழிக்கப் போராடும் ஒரு சுதந்திர போராட்ட தியாகியின் கதையாக இப்படம் உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கமல் ஹாசன், மனிஷா கொய்ராலா நடித்திருப்பர்.

சிறைச்சாலை

சிறைச்சாலை (1996): அந்தமான் சிறையில் சுதந்திர போராட்ட வீரர்கள் மீது ஆங்கிலேயர்கள் நிகழ்த்திய கொடூரங்களை காட்டும் திரைப்படம். இப்படத்தில் மோகன்லால் நடித்திருப்பார்.

பாரதி (2000): தன்னுடைய எழுத்துகளின் மூலம் சுதந்திர வேள்வியை மக்களிடையே ஊட்டிய மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை வரலாறே இப்படம்.

ஹே ராம்

ஹே ராம் (2000): காந்தியின் கொள்கை தான் தன்னுடைய மனைவி இறக்க காரணம் என காந்தியை கொல்ல நினைப்பவர், இறுதியில் காந்தியின் மகிமைகளை அறிந்து ஏற்றுக் கொள்வதே கதைக்களம். கமல் ஹாசன் இயக்கி நடித்த இத்திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரங்களிக் ஷாருக்கான், ராணி முகர்ஜி நடித்துள்ளனர்.

லகான்

லகான் (2001): பிரித்தானிய அரசாங்கம் வரியை குறைக்க அவர்களுடன் மட்டைப்பந்து ஆடும்படி வலியுறுத்த, புவன் எனும் கிராமவாசி தன்னுடைய மக்களுக்கு பயிற்சி அளித்து எப்படி வெற்றி பெறுகிறார்கள்பெறுகிறார் என்பதே கதைக்களம்.

தி லெஜெண்ட் ஆஃப் பகத் சிங் (2002): தன்னுடைய இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களை எதிர்த்து புரட்சி செய்த மாவீரன் பகத் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான திரைப்படம்.

'மதராசபட்டினம்'

மதராசபட்டினம் (2010): காதல் கதையை மையப்படுத்தி கதை இருந்தாலும், சுதந்திர போராட்டத்தின் போது மக்கள் இருந்த நிலை, போராட்டங்கள், போராட்டத்திற்கு பிறகு என்ன நடந்தது போன்ற தகவல்களை காட்டிய படம். ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர்.

சர்தார் உத்தம் (2021): ஜாலியன் வாலா பாக் படுகொலைக்கு முக்கிய காரணமான கவர்னரை, உத்தம் சிங் லண்டன் சென்று 15 ஆண்டுகள் காத்திருந்து சுட்டுக் கொன்ற கதை.


மேலும் படிக்க ஆயுதம், ரத்தம், அகிம்சை... இந்திய சினிமாவில் சுதந்திர போராட்ட திரைப்படங்கள்! #VisualStory
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top