மும்பையிலிருந்து உ.பி-க்கு கடத்தப்பட்ட 12 வயது சிறுமி; திரைப்பட பாணியில் மகளை மீட்ட தந்தை!

0

மும்பை பாந்த்ரா பகுதியில் அதிகப்படியான குடிசைகள் இருக்கின்றன. இந்தக் குடிசைப்பகுதியில் உள்ள கார்மெண்ட் தொழிற்சாலையில் பணியாற்றி வருபவர் சாஹித் கான்(24). இதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமி கடந்த 4-ம் தேதி தன் தாயாரிடம் கடைக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியில் வந்தார். ஆனால் அதன் பிறகு சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அவள் பெற்றோர் அப்பகுதியில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் தந்தை உள்ளூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் உடனே விரைந்து செயல்பட்டு விசாரணையை தொடங்கினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தபோது சிறுமியை சாஹித் கான் பேசி அழைத்துச் சென்று இருப்பது தெரியவந்தது. ஒரே பகுதியில் இருவரும் இருந்ததால் சிறுமிக்கு ஏற்கெனவே சாஹித் தெரிந்திருந்தார்.

கடத்தல்

ஷாப்பிங் செய்ய உதவி செய்யும்படி கூறி சிறுமியை சாஹித் கான் அழைத்துச் சென்றான். சிறுமியை குர்லா என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து பஸ் மூலம் சூரத் கடத்தியது தெரியவந்தது. சாஹித் கான் வேலை செய்த கார்மெண்டில் விசாரித்தபோது அவன் சொந்த ஊருக்குச் செல்லவேண்டும் என்று தெரிவித்திருந்தது தெரிந்தது. உடனே சாஹித் கான் வேலை செய்த துணி கம்பெனியில் சாஹித் முகவரி உள்ளிட்ட விவரங்களை பெற்றுக்கொண்ட சிறுமியின் தந்தை தன் மகளை தேடி உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டுச் சென்றார். உத்தரப்பிரதேசத்தின் அலிகர் மாவட்டத்தில் உள்ள அத்ரோலி என்ற கிராமத்தில் சாஹித் தான் கடத்திய சிறுமியுடன் இருந்தான்.

மும்பை போலீஸார் முதல் தகவல் அறிக்கையை உத்தரப்பிரதேச போலீஸாருக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் துணையோடு சாஹித் கிராமத்திற்குச் சென்று சிறுமியை அவள் தந்தை மீட்டார். டேக்கன் என்ற இந்திப் படத்தில் கடத்தப்பட்ட மகளை மீட்கும் தந்தையை போன்று சிறுமியின் தந்தை தனி ஒருவனாகச் சென்று தனது மீட்டுக்கொண்டு வந்துள்ளார்.

போலீஸ்

கடத்தப்பட்ட சிறுமியிடம் விசாரித்தபோது சாஹித் துணிகள் வாங்க உதவி செய்யும்படி கூறி அழைத்துச் சென்றது தெரியவந்தது. குர்லாவிற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து பஸ் மூலம் சூரத் அழைத்து சென்று அங்கிருந்து ரயில் மூலம் உத்தரப்பிரதேசம் அழைத்துச் சென்றுள்ளான். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார். மருத்துவப் பரிசோதனைக்கு பிறகுதான் அதனை உறுதி செய்ய முடியும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். சாஹித் கான் சிறுமியை விட்டுவிட்டு ஓடிவிட்டான். அவனை போலீஸார் தேடி வருகின்றனர். அவன்மீது கடத்தல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க மும்பையிலிருந்து உ.பி-க்கு கடத்தப்பட்ட 12 வயது சிறுமி; திரைப்பட பாணியில் மகளை மீட்ட தந்தை!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top