நிதிஷ் குமாரின் `மிஷன் ஆப்போசிஷன்' திட்டம்... 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடுபடுமா?!

0

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான நிதிஷ் குமார், தேசிய அரசியலில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். செப்டம்பர் 5-ம் தேதி அன்று, மூன்று நாள் பயணமாக டெல்லி சென்ற நிதிஷ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார். தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்து பேசினார். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் காட்டுவதற்காக வேறு சில தலைவர்களையும் சந்திக்கவிருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்டோரை நிதிஷ் குமார் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய அரசியலில் நிதிஷ் குமாரின் கணக்குகள் பலிக்குமா?

டெல்லி பயணம்!

கடந்த மாதம் வரை பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, அந்தக் கூட்டணியிலிருந்து விலகி, லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தது. அப்போதிலிருந்தே பா.ஜ.க-வை கடுமையாக எதிர்த்துவருகிறார் நிதிஷ். இந்த நிலையில், செப்டம்பர் 2-ம் தேதி அன்று ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய அரசியலில் களமிறங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய நிதிஷ், ``பா.ஜ.க-வுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேச டெல்லி செல்கிறேன். 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால், பா.ஜ.க 50 தொகுதிகளுக்குள் சுருங்கிவிடும். நான் அதற்காகப் பாடுபடப்போகிறேன்" என்று கூறியிருந்தார். அதன்படி, டெல்லி சென்று தனது தேசிய அரசியல் நகர்வுகளைத் தொடங்கியிருக்கிறார் நிதிஷ்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ், ``பா.ஜ.க, மாநிலக் கட்சிகளை அழிக்க நினைக்கிறது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதுதான் என்னுடைய வேலை. எனக்குப் பிரதமராகும் விருப்பமில்லை'' என்றார். அதே நேரம், பீகார் முழுவதும் `2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிதிஷுக்கும், மோடிக்கும்தான் போட்டி' என பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பா.ஜ.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள், ``தேசிய அரசியலில் கால்பதித்து பிரதமராகிவிடலாம் என்பது நிதிஷ் குமாரின் கனவு. ஐக்கிய ஜனதா தளத்தில் 5 முதல் 10 எம்.பி-க்களை மட்டுமே வைத்துக்கொண்டு பிரதமர் கனவெல்லாம் எப்படிக் காண்கிறார்கள் என்பது புரியவில்லை'' என்கின்றனர்.

மிஷன் ஆப்போசிஷன்!

`மிஷன் ஆப்போசிஷன்' என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை ஒரு குடையின்கீழ் கொண்டுவரும் வேலைகளைச் செய்துவருகிறார் நிதிஷ். ஏற்கெனவே இதே முயற்சியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் களமிறங்கினர். ஆனால், அவர்களுக்கு எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்கவில்லை. ``மம்தா, சந்திரசேகர் ராவ் ஆகிய இருவரும் செய்ததைத்தான் நிதிஷும் செய்கிறார். அவர்களிடமிருந்து நிதிஷ் தன்னை எப்படி வேறுபடுத்திக் காட்டப்போகிறார் என்பது முக்கியம். அவர்கள் இருவரை விடவும் தேர்தல் அரசியலில் அதிக அனுபவமுடையவர் நிதிஷ். தேசிய அரசியலும் அவருக்குப் புதிதல்ல.

தேஜஸ்வி - சந்திரசேகர ராவ் - நிதிஷ்

தான் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கமாட்டேன் என்று நிதிஷ் சொல்லிவருகிறார். ஆனால், அவர் அதற்கான வேலைகளைத்தான் செய்துவருகிறார் என்று தோன்றுகிறது. சமீபத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தபோது, `அடுத்த தேர்தலில் தேஜஸ்வி யாதவை எங்களது கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிப்போம்' என உறுதியளித்திருக்கிறார் நிதிஷ். மேலும், பீகார் அரசியலில் நிதிஷ் குமாருக்கான செல்வாக்கும் குறைந்துவிட்டதாகவே தெரிகிறது. எனவேதான், அவர் தேசிய அரசியலில் கால்பதித்திருக்கிறார். மேலும், எதிர்க்கட்சிகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது. எனவே, அவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி, எதிர்க்கட்சிகளை ஓர் அணியில் திரட்டுவதே நிதிஷுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்'' என்கின்றனர் தேசிய அரசியல் பார்வையாளர்கள்.

நிதிஷ் குமார்மீது, `பதவிக்காக அடிக்கடி கூட்டணி மாறும் அரசியல் பச்சோந்தி' என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதுவே அவருக்கு மிகப்பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்கு மத்தியில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் எதிர்க்கட்சிகளை ஓர் அணியில் நிதிஷ் திரட்டுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!


மேலும் படிக்க நிதிஷ் குமாரின் `மிஷன் ஆப்போசிஷன்' திட்டம்... 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடுபடுமா?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top