தமிழ்நாட்டில் சேதமடைந்த நிலையில் 5,583 பள்ளிக் கட்டடங்கள்! - அரசின் நடவடிக்கை என்ன?

0

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 8,000-க்கும் அதிகமான பள்ளிகளின் கட்டடங்கள் சுமார் 25 ஆண்டுகள் பழமையானவை. இதனால், மழைக்காலங்களில் பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதைத் தடுக்க ஒவ்வோர் ஆண்டும் பல நூறு கோடிகள் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், மறு சீரமைப்பு பணிகளிலும் முறைகேடு நடப்பதாகவும், பள்ளிக் கட்டடங்களை முறையாக சரிசெய்ய முடியவில்லை எனவும் குற்றச்சாட்டு பலரால் முன்வைக்கப்படுகிறது.

அரசுப் பள்ளி

நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட அன்றைய தினமே, புதுக்கோட்டை மாவட்டம், எஸ்.களபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4-ம் வகுப்பு மாணவர் ஒருவர் காயமடைந்தார்.

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில், ``தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கட்டடங்கள் அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக மதுரை கொடி மங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. எனவே, அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை அகற்றி புதிய கட்டடங்கள் கட்ட குழு அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மதுரை உயர் நீதிமன்றம்

இந்த மனு குறித்த விசாரணையின்போது அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ``தமிழ்நாடு முழுவதும் 5,583 பள்ளிக் கட்டடங்கள் சேதமடைந்திருக்கின்றன. 2021-2022-ம் ஆண்டில் சேதமடைந்த 2,553 பள்ளிக் கட்டடங்கள், 2022-2023-ம் ஆண்டில் 3,030 சேதமடைந்த பள்ளிக் கட்டடங்களும் அகற்றப்பட்டன. அதேபோல, நபார்டு கடன் திட்டத்தில் ரூ.3,745,28 கோடி செலவில் 6,941 பள்ளிகளில் 40,043 வகுப்பறைகள், 3,146 ஆய்வகங்கள், 10,470 கழிப்பறைகள், 5,421 குடிநீர் வசதிகள், 8,28,387 மீட்டர் சுற்றுச் சுவர் ஆகியவை கட்டப்பட்டிருக்கின்றன" எனக் கூறப்பட்டிருந்தது.

அரசின் இந்த புள்ளிவிவரங்கள் தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``அங்கன்வாடி, கழிப்பறை, வகுப்பறை என எல்லாவற்றையும் சேர்த்துதான் 5,583 பள்ளிக் கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாக் கோர்ட்டில் கூறப்பட்டிருக்கிறது. இதை சரிசெய்ய ஒவ்வோர் ஆண்டும் ரூ.100 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போதுகூட ரூ.106.78 கோடி செலவில் 2,695 பள்ளிகளில் 32 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 436 கழிவறைகள், 2,270 பள்ளிகளுக்கு குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

பள்ளிக்கல்வித்துறை

கட்டட புனரமைப்பு பணிகள் கடந்த காலங்களில் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. சிமென்ட் கலவை குறைபாடு உள்ளிட்ட பல பிரச்னைகள் இருந்தன. அந்த தவறு மீண்டும் நடைபெறக் கூடாது என்பதில் துறை மிக உறுதியாக இருக்கிறது. இன்னும் 2 ஆண்டுகளில் சேதமடைந்த பள்ளிக் கட்டடங்கள் இல்லாத நிலையை உருவாக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கான வரும் நிதியாண்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது" என்றனர்.


மேலும் படிக்க தமிழ்நாட்டில் சேதமடைந்த நிலையில் 5,583 பள்ளிக் கட்டடங்கள்! - அரசின் நடவடிக்கை என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top