வனத்துக்குள் வைரம் தேடும் கும்பல்? - வனத்துறை அதிகாரியை சுற்றும் சர்ச்சை!

0

‘வைரக்கல் கடத்தலுக்குத் துணைபோகும் வனத்துறை அதிகாரி’ என விவசாயிகள் சங்கமும், ‘அதிகாரிமீது குற்றம்சாட்டும் கும்பலைக் குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்’ என்று ஊர்ப் பொதுமக்கள் தரப்பிலுமாக எதிரெதிராக போஸ்டர் யுத்தம் நடந்துவருகிறது நெல்லை மாவட்டத்தில்!

மேற்குத் தொடர்ச்சி மலையில், களக்காடு புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள செங்கல்தேரி உள்ளிட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக வைரம் தேடிவருபவர்களை வனத்துறையினர் பிடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்த நிலையில், ‘தடைசெய்யப்பட்ட செங்கல்தேரி பகுதிக்கு சட்ட விரோதமாகச் சமூக விரோதிகளை அனுப்பிவரும் களக்காடு புலிகள் காப்பகத் துணை இயக்குநர் ராமேஸ்வரன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதையடுத்து, ‘சமூகவிரோதச் செயல்களுக்குத் துணைபோகச்சொல்லி துணை இயக்குநர் ராமேஸ்வரனை மிரட்டும் கும்பல்மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வனத்துறையினருக்கு ஆதரவாகப் பொதுமக்கள் பெயரில் பதிலடி போஸ்டர்கள் ஒட்டப்பட... களக்காட்டில் பரபரப்பு பற்றிக்கொண்டது.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரான பெரும்படையாரிடம் கேட்டோம். “களக்காடு மலைப்பகுதியில், வைரக்கல் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்புகூட வைரம் திருடும் கும்பலுக்கு உடந்தையாக இருந்ததாக ஒரு ரேஞ்சரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில், தடைசெய்யப்பட்ட செங்கல்தேரி பகுதிக்குள் சமீபத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதை விவசாயிகளே நேரில் பார்த்திருக்கிறார்கள். மேலும் வனத்துறையினரின் உதவியால் வைரக்கல் கடத்த முயற்சி நடப்பதாகத் தகவல் கிடைத்ததால், அது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி போஸ்டர் ஒட்டினோம். ஆனால், அதிகாரி ராமேஸ்வரனும் எங்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்ட ஏற்பாடு செய்கிறார். அதனால்தான் அவர்மீது எங்களுக்குச் சந்தேகம் வலுக்கிறது” என்றார் படபடப்பாக.

இந்தப் பிரச்னை குறித்துப் பேசும் வனத்துறை அதிகாரிகள் சிலர், “ராமேஸ்வரன் துணை இயக்குநராகப் பொறுப்பேற்ற பிறகு, வனத்துக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. இதனால், அதிருப்தியில் இருப்பவர்கள், அவருக்கு வைரக்கல் திருடும் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக போஸ்டர் ஒட்டினார்கள். அதற்காக, ராமேஸ்வரனும் பதிலுக்கு ஆள்வைத்து போஸ்டர் ஒட்டியிருக்கக் கூடாது” என்றனர்.

பெரும்படையார்
ராமேஸ்வரம்

இதையடுத்து, ‘களக்காடு புலிகள் காப்பகத் துணை இயக்குநர்’ ராமேஸ்வரனிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, “மேற்குத் தொடர்ச்சி மலையில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது நான் கடுமையான நடவடிக்கை எடுப்பதால், வேட்டையில் ஈடுபடுவோர், மரம் வெட்டுவோர் மற்றும் லோக்கல் அரசியல்வாதிகள் சிலர் என்மீது ஆத்திரத்தில் இருக்கிறார்கள். எனவே, எனக்கு எதிராக போஸ்டர் ஒட்டினார்கள். அதேநேரம், என் செயல்களைப் பார்த்து திருப்தியிலிருக்கும் உள்ளூர் மக்களில் சிலர், எனக்கு ஆதரவாகவும் போஸ்டர் ஓட்டினார்கள். மற்றபடி அவர்கள் யார் என்பதுகூட எனக்குத் தெரியாது” என்றார்.

என்னதான் நடக்கிறது செங்கல்தேரி பகுதிக்குள்?


மேலும் படிக்க வனத்துக்குள் வைரம் தேடும் கும்பல்? - வனத்துறை அதிகாரியை சுற்றும் சர்ச்சை!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top