தமிழக பாஜக-வை கொந்தளிக்கச் செய்த ஆ.ராசாவின் பேச்சு! - என்ன சொல்கிறது திமுக தரப்பு?

0

சமீபகாலமாக இந்து மதத்துக்கு அடித்தளமாக இருக்கும் மனு நீதி, வேத நூல்கள் உள்ளிட்டவை விவாதப் பொருளாகி வருகின்றன. குறிப்பாக திராவிடர் கழகம், தி.மு.க உள்ளிட்ட இயக்கங்கள் மனு நீதியை மிக தீவிரமாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில், திமுக எம்.பி-யும், அந்தக் கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், யாரெல்லாம் இந்துக்குள் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு கருத்தைச் சொல்வதாக சில கருத்துகளை முன்வைத்துப் பேசியிருந்தார்.

அண்ணாமலை

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆ.ராசாவின் பேச்சில் 40 நொடிகளை மட்டும் கட் செய்து தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டின் அரசியல் பேச்சின் அவல நிலை. திமுக எம்.பி மீண்டும் ஒரு சமூகத்தின்மீது வெறுப்பை உமிழ்ந்து, மற்ற சமூகத்தினரை திருப்திப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளார். தமிழகம் தங்களுக்குச் சொந்தமானது என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிஷ்டவசமானது" என்று பதிவிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக ஆ.ராசாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதியப்பட்டு வருகின்றன. அதோடு, ஆ.ராசாமீது காவல் நிலையங்களில் பா.ஜ.க-வினர் புகார் அளித்தும் வருகின்றனர். மேலும், ஆ.ராசாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட பாஜக பொதுச்செயலாளரான வழக்கறிஞர் வெங்கடாச்சலம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்துள்ளார்.

ஆ ராசா

இது தொடர்பாக தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் கேட்டபோது, ``இந்தியாவில் இல்லாத ஒன்றை ஆ.ராசா பேசவில்லை. இதிகாசங்களில், புராணங்களில் இருப்பதைதான் பேசியிருக்கிறார். கட்டுக் கதைகளை வாழ்வியலாக்கி விட்டனர். கடவுளின் பெயரில் மூடநம்பிக்கைகளையும், சாதிய தீண்டாமையை பரப்புவதைத் தடுக்கும் நோக்கத்தில் திமுக செயல்படுகிறது. அனைவரும் ஒரே கடவுளை வழிப்பட்டாலும், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர்தான் கோயில் உள்ளே செல்ல முடிகிறது. இந்த தீண்டாமையின் பிறப்பிடத்தை ஒழிக்க வேண்டும்.

2,000 ஆண்டுகளாக இருந்த வழக்கத்தை ஒழித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டத்தை கொண்டு வந்தாலும், ஆகவிதிகளில்படிதான் கோயில் இயங்க வேண்டும் என்று வழக்கு போடுகிறார்கள். 1834-ம் ஆண்டிலேயே கல்வி முறை வந்தாலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களால் கல்வி பயில 150 ஆண்டுக்கால போராட்டம் தேவைப்பட்டது. வெளிநாடுகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வு, நிற வேற்றுமை இருக்கிறது. ஆனால், ஒருவரை ஒருவர் தொடக்கூடாது என்று எங்குமில்லை. தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று புத்தகத்தில் அச்சடிக்கும் அளவுக்கு, தீண்டாமை இங்கு வாழ்வியல் ஆக்கப்பட்டுள்ளது.

இராஜீவ் காந்தி

வைதீக வழிபாடு மூலம்தான் தீண்டாமை இங்கு வந்தது. 1881-ம் ஆண்டு பரமக்குடியில் சட்டை கட்சி ஆரம்பிக்கும் அளவுக்கு தீண்டாமை இருந்தது. இந்தியாவின் இந்து சட்டத்தில் பிரிவு 3-ல் ஆ.ராசா பேசியது அப்படியே இருக்கிறது. இந்த தீண்டாமை விஷயங்களை பொதுவெளியில் பேசிக் கொண்டே இருந்ததால் மக்கள் மனது மாறும். மக்கள் மனமாற்றம் ஆகிவிடக்கூடாது என்பதில் பாஜக போன்ற அமைப்புகள் தீவிரமாக இருக்கின்றன. அதனால்தான் அதை சர்ச்சையாக்க பார்க்கிறார்கள். ஆனால், மக்கள் இதை புரிய தொடங்கிவிட்டார்கள்" என்றார். 


மேலும் படிக்க தமிழக பாஜக-வை கொந்தளிக்கச் செய்த ஆ.ராசாவின் பேச்சு! - என்ன சொல்கிறது திமுக தரப்பு?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top