``மூர்த்தி ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிப்பார்" - பிரமாண்ட திருமணத்தைப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

0

``எதையும் சிறியதாக செய்யமாட்டார், பிரமாண்டமாக செய்வார்" என்று அமைச்சர் பி.மூர்த்தி மகன் பிரமாண்ட திருமண விழாவைப் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பேசியுள்ளார்.

திருமண விழா

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், ஆர்.பி.உதயகுமாரும் போட்டி போட்டுக்கொண்டு மதுரை நகரமே குலுங்க குலுங்க பிரமாண்ட விழாக்களை நடத்தி மக்களை அவஸ்தைப்பட வைத்தார்கள். ஒரு கட்டத்தில் இது மக்கள் மத்தியில் வெறுப்பை தான் ஏற்படுத்தியது.

அதற்குப்பின் கோவிட் காலத்தில் பிரமாண்ட விழாக்கள் குறைந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அரசு விழாக்களும் தி.மு.க நிகழ்ச்சிகளும் நடந்து வந்தது.

இந்நிலையில்தான் அமைச்சர் பி.மூர்த்தி தன் மகன் திருமணத்தை மதுரை நகரமே அதிரும் வகையில் பிரமாண்டமாக நடத்தி முடித்துள்ளார்.

பி.மூர்த்தி

பிரமாண்டமான முறையில் திருமண விழா எடுத்த மூர்த்தியை ஆதரித்து பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

திருமணத்தை நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின் அப்படி என்னதான் பாராட்டிப் பேசினார். "அமைச்சர் மூர்த்தியின் இல்ல திருமண விழாவில் தலைமை தாங்கி நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விழாவை மணவிழா என்று விளம்பரப்படுத்தாமல் மாநாடு என்று விளம்பரப்படுத்தியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

திருமண விழா

அவர் கட்சி நிகழ்ச்சி உள்ளிட்ட எதையும் சிறியதாக செய்யமாட்டார். பிரமாண்டமாக நடத்துவார். எதிலும் முத்திரை பதிப்பார். தன் மகன் திருமண விழாவையும் தி.மு.க ஆட்சியின் சாதனைகளை சொல்லும் வகையில் நடத்துகிறார்.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள். ஆனால், மூர்த்தி ஒரு கல்லில் பல மாங்காய்கள் அடிப்பார். தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது மூர்த்திக்கு அமைச்சர் பதவி தர முடிவானபோது கோபக்காரராச்சே என்று நான் பயந்தேன். ஆனால், கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும் என்ற அடிப்படையில் அவருக்கு அமைச்சர் பொறுப்பை கொடுத்தோம். ஆனாலும் அந்த பயம் இருந்தது. ஆனால், பொறுப்பேற்ற பின்பு பொறுமையின் சிகரமாகிவிட்டார். பதவி ஏற்றபின் பத்திரப்பதிவு, வணிகவரித் துறைகளில் நான் எதிர்பார்த்ததை விட மிக சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறார்.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் மணமக்களை வாழ்த்த நான் குறிப்புகளை எடுத்துச்செல்வதில்லை. ஆனால், இந்த திருமண விழாவில் பேசுவதற்காக குறிப்புகளை எடுத்து வந்துள்ளேன். அந்தளவுக்கு மூர்த்தி இந்த துறைகளில் பல சாதனைகளை செய்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி, சபரீசன்

நிதிப்பற்றாக்குறையால் அரசு தவித்தபோது அவர் வகித்த துறை மூலம் அரசுக்கு 13,913 கோடி ரூபாய் வருவாயை பெற்று தந்திருக்கிறார். பத்திரப்பதிவுத்துறையில் பல புதிய திட்டங்களை கொண்டு வந்தார்.

அ.தி.மு.க ஆட்சியில் நடந்த போலி பத்திரப்பதிவுகளை ஒழிக்கும் வகையில் இந்தியவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகைய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுள்ளோம்.

மூர்த்தி பெரியதா? கீர்த்தி பெரியதா என்று என்னிடம் கேட்டால் மூர்த்திதான் பெரிதென்று சொல்வேன். அந்தளவுக்கு உழைத்துள்ளார்" என்று பேசினார்.

முதலமைச்சரின் பாராட்டு பி.மூர்த்தியை மகிழ்ச்சிபடுத்தியது மட்டுமல்லாமல், இது போன்ற பிரமாண்ட விழாக்களை தொடர்ந்து நடத்த மற்ற அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


மேலும் படிக்க ``மூர்த்தி ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிப்பார்" - பிரமாண்ட திருமணத்தைப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top