காரைக்கால்: நடுக்கடலில் தொடரும் இலங்கை கடற்படையின் தாக்குதல்! - ஒருவர் கவலைக்கிடம்

0

காரைக்காலை அடுத்த காரைக்கால்மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் விசைப்படகில், கடந்த 2 -ம் தேதி ராஜ்குமாருடன் அருண், பழனிவேல், தண்டபாணி உள்ளிட்ட 15 மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்டனர். நேற்று முந்தினம் அதிகாலை 2 மணியளவில் மீனவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே இலங்கை - இந்திய சர்வதேச எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படை படகுகளில் விரைந்து வந்த வீரர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்களின் படகினை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.

இலங்கை கடற்படையால் தொடரும் தாக்குதல்

பின்னர், மீனவர்களின் படகில் ஏறி அதிலிருந்த விலையுயர்ந்த மீன்களை அள்ளி தங்களின் படகில் ஏற்ற முயன்றதாக சொல்லப்படுகிறது. அப்போது நியாயம் கேட்ட மீனவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். மேலும், மீன் அள்ளப் பயன்படுத்தும் சவுள், இரும்பு ராடு, இரப்பர் குழாய் கொண்டும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் காரைக்கால்மேடு விசைப்படகின் உரிமையாளர் ராஜ்குமாருக்கு தலை மற்றும் உடலின் பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

மற்ற மீனவர்களும் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளாகினர். மீனவர்களின் படகிலிருந்து விலையுயர்ந்த மீன்கள், மீன்பிடி உபகரணங்கள், மீனவர்களின் கையிலிருந்த தங்க மோதிரங்கள் மற்றும் ஜி.பி.எஸ். கருவியையும் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மீனவர்கள் தங்கள் தாக்கப்பட்டது குறித்து காரைக்கால்மேடு மீனவ பஞ்சாயத்தாருக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தந்தனர். நடுக்கடலிலிருந்து காரைக்கால் நோக்கி வந்த மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை அடைந்தனர். அவர்களைக் காரைக்கால் மேடு மீனவர்கள் காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் தொடரும் தாக்குதல்

அனைவருக்கும் அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதில் தலை, மற்றும் உடலெங்கும் பலத்த காயமுற்ற விசைப்படகு உரிமையாளர் ராஜ்குமாரின் உடல்நிலை மோசமானதால், அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காரைக்காலிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட சம்பவம் காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்ட மீனவக் கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க காரைக்கால்: நடுக்கடலில் தொடரும் இலங்கை கடற்படையின் தாக்குதல்! - ஒருவர் கவலைக்கிடம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top