நிதியமைச்சரின் புதிய இலக்குகள் நிறைவேறுமா?

0

அமெரிக்கா - இந்தியா பிசினஸ் கவுன்சில் (USIBC) அமைப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய சில விஷயங்கள் விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியிருக்கிறது.

கடந்த ஜூலையில் நமது சில்லறைப் பணவீக்கம் (CPI) 6.7% என்கிற நிலைக்கு இறங்கியது. இதைப் பார்த்த நம் நிதியமைச்சர், ‘‘சில்லறைப் பணவீக்கத்தை நிர்வகிக்கும் அளவுக்குக் கட்டுக்குள் வந்துவிட்டோம்’’ என்று சொல்லியிருக்கிறார். சில்லறைப் பணவீக்கம் கடந்த ஏப்ரலில் 7.8% என்கிற அளவில் இருந்தது, கொஞ்சம் இறங்கி இருப்பது நல்ல வளர்ச்சி என்றாலும், சில்லறைப் பணவீக்க விகிதம் ஆர்.பி.ஐ நிர்ணயித்துள்ள 6% என்கிற அளவுக்கு மேலேதான் இருக்கிறது. நம் நாட்டில் இப்போது பண்டிகைக் காலம் ஆரம்பமாகி இருக்கிறது. இனிவரும் 3, 4 மாதங்களுக்கு மக்கள் நிறையவே செலவு செய் வார்கள். அப்போது இந்தப் பணவீக்கம் இன்னும் உயரவே செய்யும். எனவே, பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக நாம் இப்போதே பெருமைபட்டுக்கொள்வது சரியல்ல.

பணவீக்கம் ‘கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட’தால், இரு புதிய இலக்குகளை நிறைவேற்றப் போவதாகச் சொல்லியிருக்கிறார் நிதியமைச்சர். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது முதல் இலக்கு. ஐந்து ஆண்டுகளுக்குமுன் 5 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை, தற்போது 7% - 8% என்கிற அளவுக்கு அதிகரித்திருக்கிறது. ஆறு ஆண்டுகளுக்குமுன் நம் நாட்டின் மொத்த ஜனத் தொகையில் 46% பேர் வேலை பார்த்தனர். தற்போது அது 40 சதவிகித மாகக் குறைந்திருக்கிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் 9 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய நிலையில், மத்திய அரசாங்கம் அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

நிதியமைச்சர் சொன்ன இரண்டாவது இலக்கு, அனைத்து மக்களும் சரி சமமான செல்வத்தைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கைகளை எடுப்பது. 2021-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, நம் நாட்டின் மொத்த சொத்துகளில் 57% சொத்துகள், 10% பேரிடம் இருக்கின்றன. 21.7% சொத்துகள் 1% பேரிடம் இருக்கின்றன. ஆகக்கூடி 78.7% சொத்துகள் வெறும் 11% பேரிடமே இருக்கின்றன. மீதி 21.3% சொத்துகளைத்தான், மீதமுள்ள 89% மக்கள் வைத்திருக்கிறார்கள். அந்த 11% பேர்தான் உலகப் பணக்காரர்கள் வரை முன்னேறி இருக்கிறார்கள். இந்த நிலையில், அனைத்து மக்களுக்கும் சரிசமமாக செல்வத்தைப் பகிர்ந்தளிக்க நிதியமைச்சர் என்ன செய்வாரோ தெரியவில்லை.

நிதியமைச்சர் பேசிய இந்தப் பேச்சு, கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், முறையான எந்தத் திட்டமிடலும் இல்லாமல் இது பற்றிப் பேசி, யாருக்கு என்ன பயன்? சொல்லப்போனால், இதன்மூலம் மக்களின் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்பி ஏமாற்றும் செயலாகக்கூட இருக்க வாய்ப்புண்டு. சரியான திட்டமிடல் இல்லாமல் எந்த சாதனையையும் செய்திட முடியாது என்பதை ஆட்சியாளர்கள் மறக்கவே கூடாது!

- ஆசிரியர்


மேலும் படிக்க நிதியமைச்சரின் புதிய இலக்குகள் நிறைவேறுமா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top