பாலாற்றின் குறுக்கே ஆந்திரா கட்டும் அணை: மோதிக்கொண்ட இ.பி.எஸ் - துரைமுருகன் - ஓ.பி.எஸ்!

0

கர்நாடகாவில் உருவாகி, ஆந்திரா வழியாக தமிழ்நாட்டுக்கு வரும் பாலாறுதான் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களின் தாகத்துக்கும், விவசாயத்துக்கும் முக்கிய நீராதாரம். இப்படி, எஞ்சிவரும் நீரையும் தடுத்து நிறுத்தும் விதமாக ஆந்திர முதல்வர் அறிவித்திருக்கும் தடுப்பணை திட்டம், தமிழக அரசியல் தலைவர்களை முட்டல் மோதலில் நிறுத்தியிருக்கிறது.

பாலாறு

அறிவிப்பு வெளியிட்ட ஜெகன்மோகன் ரெட்டி:

ஆந்திரா, குப்பம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, `தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் கனகதாச்சியம்மன் கோவில் அருகிலிருக்கும் பாலாறு நீர்தேக்கத்தில் தண்ணீர் சேகரிக்கும் அளவை உயர்த்தப் போவதாகவும், அதற்காக ரூ.120 கோடி ஒதுக்கியிருப்பதாகவும் கூறினார். மேலும், குடிப்பள்ளியில் 0.77 டிஎம்சி, சாந்திபுரத்தில் 0.33 டிஎம்சி தண்ணீரையும் சேமிக்க இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக ரூ.250 கோடி ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஸ்டாலினை விமர்சித்த இ.பி.எஸ்:

ஆந்திர முதல்வரின் இந்தப்பேச்சு, பாலாற்றை நம்பியிருக்கும் தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அதையடுத்து கண்டன அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, `தமிழக மக்களுக்கு விடியலைத் தருவோம் என்று பசப்பு வார்த்தைகளைக்கூறி ஆட்சிக்கு வந்த இந்த கையாலாகாத அரசு இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது வெட்கக்கேடானது. இந்தத்திட்டம் குறித்து நன்கு அறிந்தும், தி.மு.க அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலினும், நீர்வளத்துறையும் எதிர்ப்பு தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை. கும்பகர்ண தூக்கத்தை கைவிட்டு விட்டு, உடனடியாக ஆந்திர அரசின் இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். நீதிமன்றத்தின் மூலமாக இதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கடும் விமர்சனத்துடன் கோரிக்கை வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி

இ.பி.எஸ்-ஸை நக்கலடித்த துரைமுருகன்:

இதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாக எதிர் அறிக்கை வெளியிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், `அது ஒரு பொதுக்கூட்ட செய்திதான். அந்த செய்தியை வைத்துக் கொண்டு தளபதி அரசு என்ன சாதித்துவிட்டது என்று அவசர குடுக்கையாக எதிர்க்கட்சித் தலைவர் ஒரு அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்து எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. இப்படித்தான் முன்னர் ஒரு முறை கணேசபுரத்தில் அணை கட்டப்போவதாக வந்த செய்தியைப்பார்த்து சில அறிக்கை தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட முதல்வரும் நானும் கணேசபுரம் போய் பார்த்தோம். அணை கட்டுவதற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை.

துரைமுருகன்

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை இவ்வரசு தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது. தேவையான நடவடிக்கைகளை தக்க நேரத்தில் எடுக்கும். இந்த நிர்வாக ரீதியான செயல்பாடுகள் எல்லாம் எடப்பாடியாருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. இ.பி.எஸ் எந்த அணையையும் கட்டவில்லை. அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திவிட்டு போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்?" என காட்டமாகக் கேள்வியெழுப்பினார்.

இ.பி.எஸ்-க்கு ஆதரவாக துரைமுருகனை வம்பிழுத்த ஓ.பி.எஸ்:

இந்த நிலையில், இ.பி.எஸ்-ஸை விமர்சித்த துரைமுருகனின் பதிலடிக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக அ.தி.மு.க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், `2001-2006 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடந்ததை துரைமுருகன் மறந்துவிட்டார் அல்லது தனக்கு வசதியாக மறைத்துவிட்டார். அந்த ஆட்சிக்காலத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டப் போவதாக செய்தி வந்ததும், `1892-ம் ஆண்டு ஒப்பந்தப்படி கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதியின்றி எந்த ஒரு புதிய அணைக்கட்டவோ, நீரைத் தடுப்பதற்கான கட்டுமானங்களையோ கட்டக்கூடாது என ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதினார் துரைமுருகன். அதுமட்டுமல்லாமல், `பாலாறு சஹாரா பாலைவனமாகக்கூடிய நிலைமை உருவாகிவிடும்; அதிகாரிகள் அங்கு அளவெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; மிகப் பெரிய கொந்தளிப்பு, பதற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் பேசினார்.

ஓ. பன்னீர் செல்வம்

ஆனால், தற்போதைய செய்தியை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்பதுபோல் அவரின் அறிக்கை அமைந்திருக்கிறது. இது சாதாரண பத்திரிகைச் செய்தி அல்ல, ஆந்திர முதல்வரின் பேச்சு பத்திரிகையில் செய்தியாக வெளி வந்திருக்கிறது. இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு" என துரைமுருகனுக்கு கொட்டு வைத்திருக்கிறார்.

`அறிக்கைச் சண்டையை விடுத்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுங்கள்!' என்பதே மக்களின் கோரிக்கை!


மேலும் படிக்க பாலாற்றின் குறுக்கே ஆந்திரா கட்டும் அணை: மோதிக்கொண்ட இ.பி.எஸ் - துரைமுருகன் - ஓ.பி.எஸ்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top