`நிம்மதி இல்லை'... முதல்வரை பார்க்க வீட்டைவிட்டு வந்த மாணவன் - அறிவுரை கூறி அனுப்பிய பினராயி விஜயன்

0

கேரள மாநிலம் கோழிக்கோடு குற்றியாடி அருகே உள்ள வேளம் பகுதியைச் சேர்ந்த தேவானந்த்(16). 11-ம் வகுப்பு படிக்கும் மாணவனான தேவானந்த் நேற்று முன் தினம் இரவு 9 மணி அளவில் திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் பினராயி விஜயனின் வீடு முன்பு ஆட்டோவில் வந்து இறங்கினான். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாரிடம் முதல்வர் பினராயி விஜயனை பார்க்க வேண்டும் என கூறியுளார். எதற்காக முதல்வரை பார்க்க வேண்டும் என போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு தனது தந்தை பெயர் ராஜூ. அவர் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடன் பெற்றிருந்தார்.. மாத தவணை கட்ட தவறியதால் அந்த நிதி நிறுவனம் கடும் நெருக்கடி கொடுப்பதாகவும், அதனால் தினமும் வீட்டில் பெற்றோர் கண்ணீர் வடிப்பதாகவும், அதனால் தனக்கு நிம்மதி இல்லாமலும் உள்ளதாக மாணவன் தேவானந்த் தெரிவித்துள்ளான்.

முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த மாணவன்

மேலும், வீட்டினருக்கு தெரியாமல் முதல்வர் பினராயி விஜயனிடம் உதவி கேட்க வந்துள்ளதாக மாணவன் கூறியுள்ளான். வங்கியின் கடன் தவணை செலுத்தாததால் தனது வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டியதால் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடந்த வாரம் கேரளாவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. எனவே மாணவன் தேவானந்தை மியூசியம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கி கொடுத்து விசாரித்தனர் போலீஸார்.

பின்னர் மாணவனின் தந்தைக்கு தகவல் கொடுத்து நேற்று காலை அவரை திருவனந்தபுரத்துக்கு வரவழைத்தனர். இதற்கிடையே முதல்வரை பார்க்க வேண்டும் என கோழிக்கோட்டில் இருந்து மாணவன் ஒருவன் திருவனந்தபுரத்துக்கு வந்த தகவல் பினராயி விஜயனுக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த மாணவனை பார்க்க முதல்வர் நேரம் ஒதுக்கினார். நேற்று தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் அந்த மாணவனை பினராயி விஜயன் சந்தித்து பேசினார்.

முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த மாணவன் தேவானந்த்

அப்போது மைக்ரோ பைனான்ஸ் ஒன்றில் தனது தந்தை கடன் வாங்கியது குறித்தும், கடனை செலுத்தாததால் நெருக்கடி கொடுப்பதால் வீட்டில் உள்ளவர்களின் நிம்மதி போய்விட்டததாகவும், அதனால் பெற்றோருக்கு தெரியாமல் தீர்வு தேடி முதல்வரை காண வந்ததாகவும் தேவானந்த் தெரிவித்தார். கடனை அடைப்பதற்கு வழிகாணலாம் எனக் கூறிய முதல்வர் பினராயி விஜயன், "பெற்றோருக்கு தெரியாமல் இனி வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது" என அறிவுரை கூறினார். மாணவனும் இனி அப்படி செய்யமாட்டேன் என உறுதியளித்தார். பின்னர் தேவானந்த் மற்றும் அவரின் தந்தை ராஜூ ஆயோரை போலீஸார் ரயில் நிலையம் வரை அழைத்துச்சென்று கோழிக்கோட்டுக்கு வழியனுப்பிவைத்தனர்.


மேலும் படிக்க `நிம்மதி இல்லை'... முதல்வரை பார்க்க வீட்டைவிட்டு வந்த மாணவன் - அறிவுரை கூறி அனுப்பிய பினராயி விஜயன்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top