``மத்திய நிதி அமைச்சர் கலெக்டரை மிரட்டுவது மரபு அல்ல" - கே.எஸ்.அழகிரி ஆவேசம்

0

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தூரம் 'பாரத் ஜோடோ யாத்திரா' என்ற பெயரில் 150 நாள்கள் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் இருந்து வரும் 7-ம் தேதி ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்க உள்ளார். ராகுல் காந்தி நடைபயணம் குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

ஆலோசனைக்கூட்டம் முடிந்த பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய நிதி அமைச்சர் ஒரு மாநிலத்திற்கு சென்று ஒரு மாவட்ட ஆட்சியரை நேருக்கு நேர் மிரட்டுவது என்பது மரபு அல்ல. அதற்கு அவருக்கு உரிமையும் இல்லை. அந்த விஷயத்தில் முதலமைச்சர் பதில் சொல்லியிருந்தால் பிரச்னை வேறு மாதிரி திரும்பியிருக்கும். சுதந்திரத்திற்கு முன்பு இந்த நாட்டில் தீண்டாமை, சமூக நீதி ஏற்றத்தாழ்வு, வறுமை, சாதி வேறுபாடு என பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்தது. அதையெல்லாம் கடந்து மகாத்மா காந்தி சுதந்திரம் என்ற ஒரு போர்வையில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தினார்.

சுதந்திரத்திற்கு முன்னால் இருந்த நிலைமையை போன்று ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கி வருகிறது. இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக ராகுல் காந்தி சமூக புரட்சி என்ற நிலைப்பாட்டில் இருந்து, சமூக மாற்றத்தை ஏற்படுத்த இந்த நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொள்கிறார்.

மத்திய அரசு எதையும் ஜனநாயக ரீதியாக பார்ப்பதில்லை. கூட்டாட்சி தத்துவத்தையும் அவர்கள் நோக்குவதில்லை. அவர்கள் தனிப்பட்ட ஒரு விதத்தில் இயங்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்-சினுடைய நடவடிக்கைகளால் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பான உணர்வு ஏற்பட்டுள்ளது. தேசத்தின் இறையாண்மையை காக்கவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடை பயணத்தை ராகுல் காந்தி தொடங்க உள்ளார்.

ராகுல் காந்தி நிகழ்ச்சி நடக்கும் இடத்தை பார்வையிட்ட கே.எஸ்.அழகிரி

ஜி.எஸ்.டி-யில் குறைந்த நிதியை ஈடு செய்வதாக மத்திய அரசு சொல்லியிருந்தார்கள். ஆனால், தற்போது ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மாநில அரசுகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கறுப்பு பணத்தை கைப்பற்றி ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் கறுப்பு பணமும் கைப்பற்றப்படவில்லை,15 ரூபாய் கூட போடப்படவில்லை. ஆனால், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இவற்றையெல்லாம் பொது மக்களுக்கு தெரியப்படுத்தவே ராகுல் காந்தி ஒற்றுமையை வலியுறுத்தி பேரணி மேற்கொள்கிறார்" என்றார்.


மேலும் படிக்க ``மத்திய நிதி அமைச்சர் கலெக்டரை மிரட்டுவது மரபு அல்ல" - கே.எஸ்.அழகிரி ஆவேசம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top