Doctor Vikatan: பீரியட்ஸுக்கு முன்பு ஏற்படும் மனநிலை மாற்றங்கள்... தவிர்க்க வழிகள் உண்டா?

0

Doctor Vikatan: என் வயது 25. பீரியட்ஸ் வருவதற்கு இரண்டு நாள்கள் முன்பிருந்து, எனக்கு மனநிலை மாறிவிடுகிறது. யாரைப் பார்த்தாலும் எரிச்சல், கோபம், அழுகை வருகிறது. இதை நினைத்தாலே அடுத்த மாத பீரியட்ஸ் குறித்த பயமும் சேர்ந்து கொள்கிறது. இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியா...

மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியா

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்னையை PMS (Pre Menstural Syndrome) எனப்படும் 'ப்ரீ மென்ஸ்ட்ருவல் சிண்ட்ரோம்' என்று சொல்வோம். இந்த பாதிப்பானது டீன் ஏஜில் தொடங்கி, மெனோபாஸ் வரை பலருக்கும் வரக்கூடிய சகஜமான விஷயம்தான்.

குறிப்பாக இளம் பெண்கள் பலரையும் இந்தப் பிரச்னை அதிகம் பாதிப்பதைப் பார்க்கிறோம். 28 முதல் 30 நாள்கள் சுழற்சியில் பீரியட்ஸ் வரும் பெண்களுக்கு, அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே பலவிதமான அறிகுறிகள் ஏற்படலாம்.

உடல் உப்புசம், மார்பகங்களில் கனத்த உணர்வு, மார்பகங்களில் வலி, திடீரென எடை அதிகரித்தது போன்ற உணர்வு, எரிச்சல், மனநிலையில் தடுமாற்றங்கள்... இவை எல்லாமே அத்தகைய அறிகுறிகள்தான். அப்படி ஏற்படுவது சகஜம்தான்.

இந்த அறிகுறிகள் எல்லாம் ஹார்மோன்களின் மாற்றங்களால் ஏற்படுபவையே. இவை குறித்து பயப்படத் தேவையில்லை. ஆனால் அதுவே இந்த அறிகுறிகள் தீவிரமாகி, கடுமையான மன அழுத்தத்துக்குள் போனால், அப்போது மருத்துவ ஆலோசனையை நாடுவதுதான் சிறந்தது.

மிதமான அறிகுறிகள் இருப்பவர்கள், அந்த நாள்களில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். பொரித்த, வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நிறைய காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். வழக்கத்தைவிட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

பீரியட்ஸுக்கு முன்பான ஒரு வாரத்தில், அறிகுறிகளை உணரும்போது நடைப்பயிற்சி போன்ற ஏதேனும் ஓர் உடற்பயிற்சியைச் செய்து பார்க்கலாம். உடற்பயிற்சி செய்யும்போது எண்டார்ஃபின் என்றொரு ஹார்மோன் சுரக்கும். அது மனநிலையை சமன்படுத்தும்.

period

எனவே இந்த நாள்களில் உங்களைக் கொஞ்சம் ஆக்டிவ்வாக வைத்துக் கொண்டாலே நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளிலிருந்து விடுதலை கிடைப்பதை உணர்வீர்கள். மேற்குறிப்பிட்ட விஷயங்களைச் செய்வது வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் வயதான பெண்களுக்கும் சிரமமாக இருக்கலாம்.

அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவர்களை அணுகினால் ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் கேப்ஸ்யூல் போன்ற வைட்டமின் சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைப்பார்கள். அவை அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தரும். எனவே இது உடலியல் காரணமாக ஏற்படுகிற சாதாரண பிரச்னைதான் என்பதால் பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: பீரியட்ஸுக்கு முன்பு ஏற்படும் மனநிலை மாற்றங்கள்... தவிர்க்க வழிகள் உண்டா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top