Doctor Vikatan: அன்றாட மறதி, பிற்காலத்தில் ஏற்படப்போகும் நினைவிழப்பின் அறிகுறியா?

0

அன்றாடம் பார்க்கும் நபர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள், சில எண்கள் போன்றவை திடீரென மறந்துவிடுவது ஏன்? சில நிமிடங்களுக்குப் பிறகு அவை மீண்டும் நினைவுக்கு வருகின்றன. தற்காலிக மறதிக்கு என்ன காரணம்? இது பின்னாளில் வரப்போகிற நிரந்தர மறதி பிரச்னையின் அறிகுறியா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம்

நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம்

மனிதனுடைய நினைவு என்பது பல பகுதிகளைக் கொண்டது. நாம் பார்க்கிற, கேள்விப்படுகிற விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும் என நினைப்போம். அதாவது முதலில் அந்த விஷயங்கள் நமது நினைவில் முறையாகப் பதியவேண்டும். பிறகு நினைவில் நிறுத்துவது... அடுத்து தேவைப்படும்போது அவற்றை நினைவுபடுத்துவது. இதைத்தான் ரெஜிஸ்ட்ரேஷன் (Registration), ரிட்டென்ஷன் (Retention) மற்றும் ரீகால் (Recall) என்கிறோம். இந்த மூன்றும் அடங்கியதுதான் நினைவாற்றல்.

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் தொலைபேசி எண்கள், சிலரின் பெயர்கள், எந்தப் பொருளை எந்த இடத்தில் வைத்தோம் என்பது உள்பட பல விஷயங்கள் மறந்து போகலாம். இதற்கு மேற்குறிப்பிட்ட நினைவாற்றலின் மூன்று நிலைகளில் எதில் வேண்டுமானாலும் பிரச்னை இருக்கக்கூடும்.

முதல் விஷயமாக, கவனக்குறைவின் காரணமாகவும் இப்படி மறந்து போகலாம். அதாவது பதற்றத்தின் காரணமாக ஒரு விஷயத்தைச் சரியாக கவனிக்க முடியாத நிலையில் அது நம் நினைவில் தங்காமல் போகலாம். இந்நிலையில் முதலில் குறிப்பிட்ட ரெஜிஸ்ட்ரேஷன், அதாவது நினைவுப் பதிவு என்பது நடக்காது. ஒரு விஷயம் நினைவில் பதிவாக நிலையில் அதை நினைவுபடுத்துவது என்பது இயலாமல் போகும்.

Memory loss

இதைத் தவிர மறதிக்கு வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும். அதாவது சிலருக்கு மறதி பாதிப்பு இருக்கலாம். ஆனால் அந்த மறதி அவர்களது அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறதா என்பதை கவனிக்க வேண்டியது அவசியம்.

அப்படி அன்றாட வாழ்க்கையை பாதிக்காதவரை அதில் பிரச்சனை இல்லை. அந்த நிலை 'மைல்டு காக்னிட்டிவ் இம்பேர்மென்ட்' Mild cognitive impairment (MCI) எனப்படும்.

அதுவே ஒருவரது மறதி அவரது அன்றாட வேலைகளை பாதித்தாலோ, அந்த நபருக்கு மற்றவர்களுடனான உறவை, நட்பை பாதித்தாலோ அது சற்று தீவிரமானது. அந்த நிலையை டிமென்ஷியா (Dementia) என்கிறோம்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல உங்களுக்கு இருக்கும் இந்த மறதி பாதிப்பானது பிற்காலத்தில் வரப்போகிற பிரச்னையின் அறிகுறியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அப்படி இருக்கவும் வாய்ப்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

எனவே உங்களுக்கு மறதி பாதிப்பு இருப்பதை உணர்ந்தவுடன் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி அதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் குறிப்பிட்ட சில வைட்டமின் குறைபாடுகளின் காரணமாகவோ அல்லது தைராய்டு பாதிப்பின் காரணமாகவோகூட இப்படி மறதி பாதிப்பு வரலாம்.

Brain - Representational Image

முதல் கட்டமாக இந்த விஷயங்களை கவனித்துவிட்டு அதன் பிறகும் மறதி தொடரும் பட்சத்தில், நரம்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். அவர் உங்களுடைய பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான மருந்துகள், சிகிச்சைகள் மற்றும் பயிற்சிகள் போன்றவற்றைப் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: அன்றாட மறதி, பிற்காலத்தில் ஏற்படப்போகும் நினைவிழப்பின் அறிகுறியா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top