Doctor Vikatan: கணவன், மனைவி இருவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை... ஆனாலும் கருத்தரிக்காதது ஏன்?

0

என் வயது 26. கணவருக்கு 30. திருமணமாகி 4 ஆண்டுகளாக எங்களுக்கு குழந்தை இல்லை. மருத்துவர்கள் என்னையும் என் கணவரையும் பரிசோதித்துவிட்டு இருவரிடமும் குறைகள் எதுவும் இல்லை என்கிறார்கள். குறைகளே இல்லை என்றபோதும் ஏன் கருத்தரிக்கவில்லை?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா

டாக்டர் கார்த்திகா

குழந்தையின்மைக்கான பரிசோதனைகளில் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனாலும் கருத்தரிக்காது. இந்த நிலை கடந்த சில வருடங்களில் நிறைய தம்பதியரிடம் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். இதை `அன்எக்ஸ்ப்ளெயிண்டு இன்ஃபெர்ட்டிலிட்டி' (Unexplained Infertility ) என்று சொல்வோம்.

சாதாரணமாக குழந்தையின்மைக்கான பரிசோதனை என்று பார்த்தால் முதலில் செய்யப்படுவது ஸ்கேன். அதில் கருமுட்டை வளர்கிறதா, வளர்ந்து வெடிக்கிறதா என்பதைப் பார்க்க முடியும்.

அதேபோல கருக்குழாய்கள் இரண்டும் எந்த அடைப்புமின்றி இருக்கின்றனவா என்பதையும் ஸ்கேனில் பார்த்துக் கண்டறிய முடியும். கர்ப்பப்பையில் கட்டிகள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதும் பரிசோதிக்கப்படும்.

Pregnancy

அடுத்து கணவருக்கான பரிசோதனைகள்... அதில் அவருக்கு விந்தணுக்களின் தரம் எப்படியிருக்கிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். அணுக்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா, அவற்றின் நகரும் தன்மை எப்படியிருக்கிறது என்பதெல்லாம் பரிசோதிக்கப்படும்.

இப்படி கணவன், மனைவி இருவருக்கும் செய்யப்படுகிற டெஸ்ட்டுகள் அனைத்திலும் எந்தப் பிரச்னைகளும் இல்லை, நார்மலாக இருக்கின்றன என்ற பட்சத்தில் இந்த நிலையை ``அன்எக்ஸ்ப்ளெயிண்டு இன்ஃபெர்ட்டிலிட்டி’’ என்று சொல்வோம்.

இதைத் தவிர சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கருமுட்டை வளர்வதையும் வெடிப்பதையும் பரிசோதனையில் பார்க்க முடியுமே தவிர, அந்த முட்டையின் தரம் எப்படியிருக்கிறது என்று சொல்ல முடியாது.

அதேபோலதான் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் நகரும் திறனைப் பரிசோதனையில் பார்க்க முடியுமே தவிர, அவற்றின் செயல்திறன் எப்படியிருக்கிறது என்பது தெரியாது. இந்த இரண்டும்கூட `அன்எக்ஸ்ப்ளெயிண்டு இன்ஃபெர்ட்டிலிட்டி’ நிலைக்கு காரணமாகலாம்.

Medical Test

இப்படி `அன்எக்ஸ்ப்ளெயிண்டு இன்ஃபெர்ட்டிலிட்டி' என்று உறுதிசெய்யப்பட்டவர்கள், ஐவிஎஃப் மாதிரியான செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகளை முயற்சி செய்யலாம். அப்போது அவர்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: கணவன், மனைவி இருவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை... ஆனாலும் கருத்தரிக்காதது ஏன்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top