Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் இருவருக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பது உண்மையா?

0

Doctor Vikatan: நான் 3 மாத கர்ப்பமாக இருக்கிறேன். இந்தக் காலத்தில் வழக்கத்தைவிட அதிகம் சாப்பிடச் சொல்லி வீட்டில் எல்லோரும் வற்புறுத்துகிறார்கள். அப்போதுதான் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்கிறார்கள். அது உண்மையா? கர்ப்ப காலத்தில் எத்தனை கிலோ எடை கூட வேண்டும்? எடை குறைவாக இருப்பது பிரச்னையா?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

கர்ப்பிணிகள் குழந்தைக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பது காலங்காலமாகச் சொல்லப்படுகிற ஒன்றுதான். இருவருக்குச் சாப்பிட வேண்டும் என்ற நம்பிக்கையில் அளவுக்கதிகமாகச் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை.

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் 1,800 கலோரிகள் சாப்பிட்டாலே போதுமானது. அதைத் தாண்டி கூடுதலாக நீங்கள் எதையும் சாப்பிடத் தேவையில்லை. அதாவது நீங்கள் ஏற்கெனவே என்ன சாப்பிட்டுக் கொண்டிருந்தீர்களோ, அதையே இந்த மூன்று மாதங்களில் சாப்பிட்டால் போதுமானது.

சிலருக்கு கர்ப்ப காலத்தில் வாந்தி, தலைச்சுற்றல் அதிகமாக இருக்கும். அதனால் சரியாகச் சாப்பிட மாட்டார்கள். எனவே அப்படி இருந்தால் தேவையான ஊட்டச்சத்துகள் உடலில் சேர்கின்றனவா என்பதில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

4 முதல் 6 மாதங்கள் வரையிலான இரண்டாவது ட்ரைமெஸ்ட்டரில் நீங்கள் 2,200 கலோரிகள்வரை சாப்பிட வேண்டும். அதாவது 300 முதல் 350 கலோரிகள்வரை அதிகமாக நீங்கள் உட்கொள்ள வேண்டியிருக்கும். அதற்காக இன்னொரு வேளை உணவு சாப்பிட வேண்டும் என்றில்லை. ஒரு டம்ளர் பால் குடித்தாலே அதிலிருந்து உங்களுக்கு 150 கலோரிகள் கிடைத்துவிடும். அந்த வகையில் இரண்டு டம்ளர் பால் குடித்தாலே அந்த அதிகப்படியான 300 கலோரிகள் உங்களுக்குக் கிடைத்துவிடும்.

Pregnant woman

7 முதல் 9 மாதங்கள்வரையிலான மூன்றாவது ட்ரைமெஸ்ட்டரில் மொத்தமாகவே 2,400 கலோரிகள் தான் சாப்பிட வேண்டும். அந்த வகையில் கர்ப்பம் தரிப்பதற்கு முன் நீங்கள் சாப்பிட்டதிலிருந்து 400 முதல் 450 கலோரிகள்வரை அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும். இதற்கும் நீங்கள் இரண்டு டம்ளர் பாலுடன் ஒரு முட்டையோ அல்லது பத்து பாதாமோ சாப்பிட்டாலே போதுமானது.

எனவே கர்ப்ப காலத்தில் இருவருக்கும் சாப்பிட வேண்டும் என அதிகம் சாப்பிடுவது, நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவது, ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கர்ப்பகாலத்தில் 10 முதல் 15 கிலோ வரை எடை கூடலாம். ஆனால் அந்த எடையானது முந்தைய கர்ப்பத்தின் போதான எடையையும் பொறுத்தது. ஒருவேளை உங்களுடைய முந்தைய கர்ப்பத்தில் மிகக் குறைவாகவே எடை கூடியிருந்தால் அடுத்த கர்ப்பத்தில் நீங்கள் 18 கிலோவரைகூட எடை கூடலாம்.

கர்ப்பிணி

அதுவே முந்தைய கர்ப்பத்தில் அதிக எடை கூடியிருந்தால் அடுத்த கர்ப்பத்தில் அதை 7 முதல் 8 கிலோவுக்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. கர்ப்பகாலத்தில் மொத்தமாக 7 கிலோ எடை அதிகரித்தாலே போதுமானதுதான். பிஎம்ஐ நார்மலாக உள்ளவர்கள் 10 முதல் 15 கிலோ வரை எடை கூடலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் இருவருக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பது உண்மையா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top