பூஜைக்காக ஒன்றுகூடிய மக்கள் - 150 ஆண்டுகள் பழைமையான குஜராத் பாலம் இடிந்து 100-க்கும் மேற்பட்டோர் பலி

0

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஓடும் மச்சு ஆற்றில், நேற்று மாலை, வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான சாத் பூஜைக்காக ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பூஜை செய்து பொருட்களை ஆற்றில் போட்டுக்கொண்டிருந்தனர். அதில் அதிகமானோர் பெண்கள் ஆவர். இந்நிலையில் திடீரென அந்த கேபிள் பாலத்தின் மத்திய பகுதி இடிந்து விழுந்தது. இதனால் பாலத்தில் நின்றிருந்தவர்கள் அப்படியே ஆற்றுக்குள் விழுந்தனர். அவர்களை தீயணைப்பு துறையினரும், உள்ளூர் மக்களும், போலீஸாரும் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக இந்த மீட்புப்பணி நடந்தது. இதில் அதிகாலை வரையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். பாலம் இடிந்து விழுந்த போது 100க்கும் அதிகாமானோர் ஆற்றில் விழுந்துள்ளனர்.

இடிந்து விழுந்த பாலம், நேற்று முன்தினத்தில் இருந்தே மிகவும் ஆபத்தான நிலையில் ஆடிக்கொண்டிருந்தது. அப்படி இருந்தும் மாநில அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று ஒரே நேரத்தில் 500 பேர் அதன் மீது நின்று பூஜை செய்ததால் பாலம் இடிந்துவிட்டது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 150 ஆண்டுகள் பழமையான இந்த பாலம், கடந்த 26-ம் தேதி குஜராத் புத்தாண்டு தினத்தன்று தான் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் பழுதுபார்க்கப்பட்டு திறக்கப்பட்டது. 7 மாதத்திற்கு முன்புதான் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டு தற்போது திறக்கப்பட்டது. பாலம் இடிந்து விழுந்து ஏராளமானோர் கரைக்கு வர போராடிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரைக்கு வந்தனர். அதிகமானோர் இடிந்து விழுந்த பாலத்தை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். பாலம் இடிந்து விழுந்ததற்கு மாநில அரசு முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பிரிஜேஷ் கூறுகையில், ``பாலம் கடந்த வாரம்தான் பழுதுபார்க்கப்பட்டது. தற்போது இடிந்து விழுந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அரசு இதற்கு முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி முதல்வரிடம் பேசியிருக்கிறார். அரசு உயர் அதிகாரிகள் அனைவரும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார். கட்ச் மற்றும் ராஜ்கோட்டில் இருந்து மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இது தவிர் தேசிய பேரிடர் மேலாண்மை படை, ராணுவம், கடற்படை, விமானபடையினரும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் இரவில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மீட்புப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி இச்சம்பவம் குறித்து அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார். மாநில முதல்வர் புபேந்தர பட்டேல் நடந்த சம்பவத்தற்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளதோடு இழப்பீடும் அறிவித்துள்ளார். அதோடு தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு விபத்து நடந்த இடத்திற்கு முதல்வர் விரைந்துள்ளார். ராஜ்கோட் எம்.பி. மோகன் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ``இது வரை 60க்கும் அதிகமானோரின் உடல்கள் மீட்கப்பட்டு இருக்கிறது(நேற்றிரவு நிலவரப்படி). 79 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 60 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது” என்றார்.

``இடிந்து விழுந்த பாலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பழுதுபார்த்து 15 ஆண்டுகளுக்கு தனது கட்டுப்பாட்டில் வைத்து பராமரிக்க மோர்பி மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கொடுத்திருந்தது. அந்த நிறுவனம் பாலத்தை பழுதுபார்த்து எங்களுக்கு சொல்லாமலேயா திறந்துவிட்டனர். பாலம் பாதுகாப்பு தனிக்கை கூட செய்யப்படவில்லை” என்று மாநகராட்சி அதிகாரி சந்தீப்சிங் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க பூஜைக்காக ஒன்றுகூடிய மக்கள் - 150 ஆண்டுகள் பழைமையான குஜராத் பாலம் இடிந்து 100-க்கும் மேற்பட்டோர் பலி
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top