ஈரோடு: கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி - மீன் பிடிக்கச் சென்றபோது நடந்த சோகம்!

0

ஈரோடு மாவட்டம், அந்தியூர், தவுட்டுப்பாளையம் பழனியப்பா 4ஆவது குறுக்கு வீதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன்  ராகவன் (10), அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் நந்தகிஷோர் (10), ஏழாவது குறுக்கு வீதியைச் சேர்ந்த பாலன் மகன் சிபினேஷ் (11) ஆகிய மூன்று பேரும் காமராஜ் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்றுமுந்தினம் மாலை 3 சிறுவர்களும், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே செங்காட்டுகுட்டையில் உள்ள கல்குவாரி குட்டைக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
மீன் பிடிப்பதற்காக தூண்டில் போட்டு காத்திருந்த சிவனேஷ், குவாரி குட்டைக்குள் தவறி விழுந்தான். அவனைக் காப்பாற்ற சென்ற மற்ற 2 சிறுவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர். பல ஆண்டுகளாக உள்ள அந்த கல் குவாரி குட்டையின் அடியில் சேறு இருந்ததுடன், அதிக ஆழமாக இருந்ததால் மூவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.

Cibinesh

அப்போது அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் அவர்களை காப்பாற்ற யாரும் வரவில்லை. இதனால் தண்ணீரில் தத்தளித்த மூவரும் மூழ்கினர். மாலை 6 மணி ஆகியும் சிறுவர்கள் வரவில்லையே எனக்கருதிய அவர்களது  பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். செங்காட்டுக்குட்டை பகுதியில் இருந்த கல்குவாரி குட்டைக்கு அருகே மூன்று சிறுவர்களும் வந்த சைக்கிள் நின்றிருந்ததை பார்த்து அங்கு தேடிய போதுதான் ராகவனின் உடல் மட்டும் மிதந்து கொண்டிருந்ததைக் கண்டனர். அதன் பின்னர் தான் மூன்று சிறுவர்களும் குட்டையில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Ragavan, NandhaKishore

அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர், அரை மணி நேரம் அவர்களது உடலைத் தேடியதில் 3 சிறுவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுவர்களின் சடலங்கள் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த ராகவன் மற்றும் நந்தகிஷோர் ஆகிய இருவரும் உறவினர்கள் ஆவர். நந்து கிஷோரின் தாயார் கடந்த ஆண்டு கொரோனாவால் பலியானார் என்பதும், தந்தை அரவணைப்பில் வளர்ந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உறவினர்கள் கதறல்

3 சிறுவர்களும் மூழ்கி உயிரிழந்த கல்குவாரி குட்டை அதிமுகவைச் சேர்ந்த பிரமுகருக்கு சொந்தமானது என்றும்,  அந்த குவாரியை மூடாததால் இந்த விபத்து ஏற்பட்டது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மூன்று சிறுவர்கள் இறந்த  சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க ஈரோடு: கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி - மீன் பிடிக்கச் சென்றபோது நடந்த சோகம்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top