`நாங்கள் இனி படிக்க மாட்டோம்; தேட வேண்டாம்!' - பள்ளிக்குச் சென்ற 5 மாணவர்கள் மாயம்; போலீஸ் விசாரணை

0

சேலம், அழகாபுரம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ரெட்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். இதே பள்ளியில் நகர மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பத்தாம் வகுப்பும், அவரின் தம்பி எட்டாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். மேலும், எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய சகோதரர்கள் இரண்டு பேர் என 5 பேர் நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்றிருக்கின்றனர். பின்னர் பள்ளி முடிந்து வீடு திரும்ப வேண்டிய மாணவர்கள் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப் போன மாணவர்களின் பெற்றோர்கள் விசாரித்து தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது காணாமல் போன மாணவர்களில் ஒருவர் தன் பெற்றோருக்கு ஒரு செல்போன் எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு, ``நாங்கள் இனி படிக்க மாட்டோம். எங்களை தேட வேண்டாம், நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

பள்ளி மாணவர்கள்

அதன் பின்னர் அந்த மாணவன் பேசிய நம்பர் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்டுபிடித்து தரும்படி அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து மேற்கண்ட ஐந்து மாணவர்களை பற்றிய தகவல்களை சேகரித்து... எங்கு இருக்கின்றனர்? பள்ளியில் ஆசிரியர்கள் ஏதும் மாணவர்களை திட்டினார்களா? அல்லது ஏதும் கடத்தல் கும்பலிடம் சிக்கியுள்ளனாரா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


மேலும் படிக்க `நாங்கள் இனி படிக்க மாட்டோம்; தேட வேண்டாம்!' - பள்ளிக்குச் சென்ற 5 மாணவர்கள் மாயம்; போலீஸ் விசாரணை
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top