`தண்ணி பட்டா தாங்கமாட்டேன்!' 65 ஆண்டுகள் குளிக்காத மனிதர் மரணம்; தண்ணீர்தான் காரணமா?

0
65 ஆண்டுகள் குளிக்காமல் இருந்த ஈரானைச் சேர்ந்த, உலகின் மிக அழுக்கான மனிதர் தனது 94வது வயதில் உயிரிழந்தார்.

ஈரானைச் சேர்ந்தவர் அமு ஹாஜி. இவர் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக, தன் உடலில் சோப்பு, தண்ணீர், மழைநீர் என எதுவும் தன் உடலை நனைக்காமல், குளிக்காமல் இருந்து வந்துள்ளார்.

Bath (Representational Image)

உடலில் தண்ணீர் பட்டால், உடல் நலக்குறைவு ஏற்படும் என, அவர் உறுதியாக நம்பியதால் இததனை ஆண்டுகளாக குளிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது 94ம் வயதில் தேஜ்கா என்னும் தனது கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, ``சிறுவயதில் அவருக்கு நேர்ந்த சில உணர்ச்சிகரமான சம்பவத்தால் அவர் தண்ணீர் மற்றும் சுத்தத்தை அறவே வெறுத்துவிட்டார். இருப்பினும், சில மாதங்களுக்கு முன் நாங்கள் மிகவும் கட்டாயப்படுத்தி அவரைக் குளிக்க வைத்தோம்” என்றனர்.

கடந்த 2013ல் இவரைப் பற்றி “ The stranger life of Amou haji” என்ற,ஆவணப்படம் வெளியானது. இவர் சாலையோரங்களில் இறந்துகிடக்கும் விலங்குகளை உணவாகவும், அதன் கழிவுகள் கொண்டு தானே தயார் செய்யும் சிகரெட்டைக் குடித்து வந்ததாகவும், தொடர்ந்து ஒரே நேரத்தில் அதிக சிகரெட் புகைக்கும் பழக்கம் கொண்டவர் இவர்.., எனவும் சொல்லப்படுகிறார். தூய்மையாக, சுத்தமாக இருப்பதே நோய்வாய்ப்பட காரணமாக இருக்கும் என்பதை அவர் இறுதிவரை நம்பிக்கொண்டிருந்தார்.

மாதிரி படம்

இதேபோல் இந்தியாவில் வாரணாசியில் 30 வருடங்களாக ஒருவர் குளிக்காமல் இருப்பதாக 2009ல் செய்தி வெளியானது.வாரணாசியில் ஒரு கிராமத்தை சேர்ந்த கைலாச கலா சிங் என்பவர், நாடு எதிர்கொள்ளும் எல்லா பிரச்னைகளையும் முடிவுக்கு கொண்டுவரும் வகையில் 30 ஆண்டுகளாக குளிக்காமல் இருப்பதாகச் சொல்கிறார். ஆனால் அவர் தினமும் இரவு மக்களைக் கூட்டி வைத்துக்கொண்டு, மைதானத்தின் நடுவில் தீ முட்டி அதன் அருகில், ஒற்றைக் காலில் நின்று கஞ்சா புகைத்துக் கொண்டே, சிவனை வேண்டிக் கொள்வாராம்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது சொன்னாராம், “இது தீக்குளியல். தண்ணீரைப் போல் தான். இது உடலின் அனைத்து கிருமிகளையும், தொற்றுகளையும் அழிக்க உதவுகிறது என்றார்”…!

சில மாதங்களுக்கு முன்பு, அமு ஹாஜி யை குளிக்க வைத்தபோது அவர் மனமுடைந்து காணப்பட்டார். அதன் பிறகுதான் அவர் இறந்தார் எனவும் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆனால், மருத்துவர்கள் பரிந்துரைப்படி உடலை சுத்தமாக வைத்திருப்பதே ஆரோக்கியமானது. இதுபோன்ற செயல்கள் வரவேற்கத்தக்கதல்ல.


மேலும் படிக்க `தண்ணி பட்டா தாங்கமாட்டேன்!' 65 ஆண்டுகள் குளிக்காத மனிதர் மரணம்; தண்ணீர்தான் காரணமா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top